தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji Arrest:'நான் இருக்கேன் தைரியமா இருங்க..' அமைச்சர் செந்தில் பாலாஜியை தேற்றிய முதல்வர் ஸ்டாலின்!

Senthil Balaji Arrest:'நான் இருக்கேன் தைரியமா இருங்க..' அமைச்சர் செந்தில் பாலாஜியை தேற்றிய முதல்வர் ஸ்டாலின்!

Jun 14, 2023, 10:52 AM IST

இன்று அதிகாலை முதல் ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தனர். இந்நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று நலம் விசாரித்தார். மேலும் தார்மீக ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை முதல் ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தனர். இந்நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று நலம் விசாரித்தார். மேலும் தார்மீக ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை முதல் ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தனர். இந்நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று நலம் விசாரித்தார். மேலும் தார்மீக ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில் பாலாஜி நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar: 'முதலமைச்சரை ஒருமையில் பேசியதை ஏற்க முடியாது'.. சவுக்கு சங்கர் வழக்கில் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

No Parking Fine: சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு அபராதம்!

Jayakumar Death Case: நீடிக்கும் மர்மம்.. நெல்லை காங்கிரஸ் தலைவர் மரண வழக்கு சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம் ஏன்?

Savukku Shankar : சவுக்கு சங்கர் வழக்கில் திடீர் திருப்பம்.. சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சு வலி ஏற்பட்டு கதறி துடித்தார். அதுகுறித்த வீடியோக்கள் செய்திகளில் வெளியாகி பதற்றததை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அவரது காது பகுதியில் வீக்கம் உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல அமைச்சர்கள் இன்று அதிகாலை முதல் ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தனர். இந்நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.

செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று நலம் விசாரித்தார்.  மேலும் தார்மீக ஆதரவையும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவில் செந்தில் பாலாஜியை சந்தித்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது உடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியம் உள்ளார். 

முன்னதாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜக பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும் தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இது மாதிரியான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்வார்கள் என்றும் சொல்லி இருந்தேன்.

அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் நேற்றைய தினம் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வந்தார். இந்த நிலையில் தேவையில்லாத வகையில் அத்துமீறி - அனுமதியின்றி பலவந்தமாக, தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய கோப்பு ஆவணங்கள் நிறைந்த தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசாரணை என்ற பெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி இருக்கிறார்கள். தலைமைச் செயலகத்திலேயே புகுந்து ரெய்டு நடத்துவோம் என்று காட்ட நினைத்திருக்கிறார்கள். இதனைக் கண்டித்து விரிவான அறிக்கையை நான் நேற்று மாலையே கொடுத்துள்ளேன்.

நான் மட்டுமல்ல, அகில இந்திய கட்சித் தலைவர்களும் பல்வேறு மாநில முதலமைச்சர்களும் இதனைக் கண்டித்துள்ளார்கள். ஏனென்றால் இதுமாதிரி பா.ஜ.க. இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்து வருவதை இந்தியாவின் அனைத்துத் தலைவர்களும் அறிவார்கள். அதுதான் இங்கும் நடக்கிறது.

விசாரணை என்ற பெயரால் நேரத்தை கடத்தி, செந்தில் பாலாஜியை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தொல்லைக்குள்ளாக்கி இருப்பதாக தெரிகிறது. நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார்கள்.

நள்ளிரவு 2 மணி வரை இதைச் செய்து இறுதியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்கள். இப்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறார்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் சித்ரவதை செய்யும் நோக்கத்துடன் ஏன் செயல்பட வேண்டும்? இந்த வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வளவு மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டிருப்பது தேவையா?

அதிகாரிகளை ஏவியவர்களின் குரூர சிந்தனை இதன் மூலம் வெளிப்படுகிறது. என்ன வழக்கோ அதனை சட்டப்படி செந்தில் பாலாஜி சந்திப்பார்.

எங்களது அரசியல் நிலைப்பாடு எதுவோ அதில் நாங்கள் உறுதியாகத் தொடர்வோம். இந்த வழக்கை சட்ட ரீதியாக தி.மு.க. உறுதியுடன் எதிர்கொள்ளும். பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. இந்த அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி