தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Woman Killed: முகம் சிதைக்கப்பட்ட பெண் - சிக்கிய காவலர் மகன்

Woman Killed: முகம் சிதைக்கப்பட்ட பெண் - சிக்கிய காவலர் மகன்

Jan 28, 2023, 01:59 PM IST

சிதம்பரத்தைச் சேர்ந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் மகன் சிக்கி உள்ளார்.
சிதம்பரத்தைச் சேர்ந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் மகன் சிக்கி உள்ளார்.

சிதம்பரத்தைச் சேர்ந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் மகன் சிக்கி உள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலமதி மலையில் பாறை இடுக்குகள் இருந்த பள்ளத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று காலை உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனை பாகாயம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Vedasandur Crime: கள்ளக்காதல் மோகம்..கூலிப்படையை ஏவி கணவரை ஸ்கெட்ச் போட்டு கொல்ல முயன்ற மனைவி - நடந்தது என்ன?

Today Gold Rate: ஒரே நாளில் சட்டென குறைந்த தங்கம் விலை..சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா? - இன்றைய நிலவரம் இதோ!

TNEB Bill: விவசாயிக்கு ரூ.8.75 லட்சம் EB பில் வந்த விவகாரம்.. '8' போட்டு வேட்டு வைத்தது அம்பலம்!

Tiruvannamalai: மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகளுக்கு என்ன தண்டனை தெரியுமா?- மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

அங்கு சடலமாக கிடந்த அந்த பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. அவர் கழுத்தில் தாலி இருந்தது ஆனால் யார் என்று தெரியவில்லை. ஒருவேளை கொலை செய்து பாறை என் மேல் தூக்கி வீசப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

அந்த பெண்ணின் உடலை காவல்துறையினர் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னர் கொலை செய்யப்பட்ட சடலமாக கடந்த பெண் சிதம்பரத்தைச் சேர்ந்த குணப்பிரியா என தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிதம்பரத்தில் இருக்கும் அப்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து குணப்பிரியாவின் உடலை அடையாளம் கண்டுபிடித்தனர்.

உயிரிழந்த குணப்பிரியா வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் மகனுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பந்தமாக காவல் உதவி ஆய்வாளர் மகனை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவேளை இந்த கொலை திருமணத்தை மீறிய உறவால் நடந்திருக்குமோ? என்ற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி