தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Nostalgia: ஒரு நீச்சல் வீரரின் கனவாகிப்போன ஒலிம்பிக் பதக்கம்- நினைவலைகள்

Nostalgia: ஒரு நீச்சல் வீரரின் கனவாகிப்போன ஒலிம்பிக் பதக்கம்- நினைவலைகள்

I Jayachandran HT Tamil

Dec 03, 2022, 11:12 PM IST

கின்னஸ் உள்பட பல்வேறு சாதனைகளைப் படைத்து அர்ஜுனா விருதையும் பெற்ற தமிழக நீச்சல் வீரரின் கனவாகிப் போன ஒலிம்பிக் பதக்கம் பற்றிய நினைவலைகள் இது.
கின்னஸ் உள்பட பல்வேறு சாதனைகளைப் படைத்து அர்ஜுனா விருதையும் பெற்ற தமிழக நீச்சல் வீரரின் கனவாகிப் போன ஒலிம்பிக் பதக்கம் பற்றிய நினைவலைகள் இது.

கின்னஸ் உள்பட பல்வேறு சாதனைகளைப் படைத்து அர்ஜுனா விருதையும் பெற்ற தமிழக நீச்சல் வீரரின் கனவாகிப் போன ஒலிம்பிக் பதக்கம் பற்றிய நினைவலைகள் இது.

* குற்றாலீசுவரனை நினைவிருக்கிறதா தமிழர்களே. தமிழகமும், இந்தியாவின் கொண்டாடிய அந்த இளம் சிறுவனின் கனவொன்று நிறைவேறாமல் போன கதை தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

ISL Final 2024: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

* 90களில் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரிச்சியமான பெயர்களில் ஒன்று குற்றாலீசுவரன்.

* ஒரு 13 வயது சிறுவனைக் கொண்டாடித்தீர்த்துக்கொண்டிருந்தது தமிழகம். ஈரோட்டைச் சேர்ந்த குற்றாலீசுவரன், உலக அரங்கில் தமிழகத்தின் பெருமையை உயர்த்திக்காட்டியதே அதற்குக் காரணம்.

* கிரிக்கெட் மோகத்தில், பேட்டும், கையுமாக மைதானங்களை நோக்கிச் சிறுவர்கள் படையெடுத்துக்கொண்டிருந்தபோது, குற்றாலீசுவரன், கடல்களைக் கடந்து கொண்டிருந்தார்.

* அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் பொருளாதார உதவியால், பாக் ஜலசந்தியை நீந்திக்கடந்தபோது, ஒவ்வொரு தமிழரும், தங்கள் குடும்பத்து பிள்ளையாக, மானசீகமாகக் குற்றாலீசுவரனை அணைத்துக்கொண்டிருந்தனர்.

* 1997ம் ஆம் ஆண்டில், 6 கடல்களை நீந்திக்கடந்து கின்னஸ் சாதனை படைத்த குற்றாலீசுவரனுக்கு, இந்திய அரசு அர்ஜுனா விருது அளித்துக் கவுரவித்தது.

* சரி இப்போது குற்றாலீசுவரன் எங்கே இருக்கிறார்? இந்தக் கேள்வியே உங்களை அதிரச்செய்யலாம். ஆம், ஒரு காலத்தில் குழந்தைகளின் கனவு நாயகனாக இருந்த குற்றாலீசுவரன், இப்போது வெளிநாடு ஒன்றில் வங்கி அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.

* எத்தனை வலியோடும், வேதனையோடும், அவர் தனது கனவை விட்டுச்சென்றிருப்பார் என்பதை நினைத்தாலே நமக்கும் கவலை கவ்விக்கொள்கிறது.

* அரசு உதவி கிடைத்த போதும், கல்வியை தொடர்வதற்காக, சிறிது காலம் தனது கனவான நீச்சலை விட்டு விலகியிருந்த போதும், இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் பிரிவில் தங்கம் வெல்ல வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது.

* ஆனால் ஒவ்வொரு போட்டிக்கும், சாதனைக்குப் பின்னும், பெரும் பொருளாதார நெருக்கடி இருந்ததால், ஸ்பான்சர்களை தேடி அலைய வேண்டி இருந்தது குற்றாலீசுவரனுக்கும், அவரது தந்தையான வழக்கறிஞர் ரமேஷுக்கும்.

* ஸ்பான்சர்கள் கிடைக்காத நிலையில், கனவை ஒதுக்கிவிட்டு, கல்வியை தேர்வு செய்த குற்றாலீசுவரன், பொறியியல் பட்டம் பெற்று தற்போது, கனடாவில் பணியாற்றி வருகிறார்.

* கனவுகள் எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும், அது எல்லோருக்கும் நனவாகிவிடுவதில்லை. நனவான சில பேருக்கு மட்டுமே தெரியும், அதற்காக எத்தனை நாட்கள் தூக்கத்தை தொலைத்திருப்பார்கள் என்று.

* குற்றாலீசுவரன் விலகிவிட்டாலும், அவர் பங்கேற்ற போட்டி இன்றும் தொடர்கிறது. அடுத்தவரை அந்த இடத்திற்கு கொண்டு வருவது அத்தனை எளிதான காரியம் அல்லவே.