தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  தவானுக்கு காயம்! 10 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் வீரர்

தவானுக்கு காயம்! 10 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் வீரர்

Apr 15, 2023, 07:53 PM IST

LSG vs PBKS: தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் இன்றைய போட்டியில் விளையாடாத நிலையில், அந்த அணியின் கேப்டனாக இளம் வீரர் சாம் கரண் கேப்டனாக செயல்படுகிறார்.
LSG vs PBKS: தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் இன்றைய போட்டியில் விளையாடாத நிலையில், அந்த அணியின் கேப்டனாக இளம் வீரர் சாம் கரண் கேப்டனாக செயல்படுகிறார்.

LSG vs PBKS: தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் இன்றைய போட்டியில் விளையாடாத நிலையில், அந்த அணியின் கேப்டனாக இளம் வீரர் சாம் கரண் கேப்டனாக செயல்படுகிறார்.

ஐபிஎல் 2023 தொடரின் 21வது லீக் போட்டி லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே லக்னெள மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பெளலிங்கை தேர்வு செய்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

Olympic 2024: முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்பட 5 பிளேயர்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி

April Sports Rewind: செஸ் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த குகேஷ், அனல் பறந்த ஐபிஎல்.. ஸ்போர்ட்ஸில் முக்கிய நிகழ்வுகள்

Archer Deepika Kumari: வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஒலிம்பிக்கிற்கான TOPS திட்டத்தில் மீண்டும் சேர்ப்பு

பஞ்சாப் கேப்டனாகவும், அணியின் பார்மில் இருக்கும் பேட்ஸ்மேனுமான ஷிகர் தவான் இன்றைய போட்டியில் விளையாடாமல் இருப்பது மிகப் பெரிய பின்னடைவாகவே அமைந்துள்ளது. பஞ்சாப் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் மட்டும் களமிறங்குகிறார்கள்.

அதர்வா டைடே, ஹர்ப்ரீத் பாட்டியா ஆகியோ ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இம்பேக்ட் வீரர்களாக பிரப்சிம்ரன் சிங், நாதன் எல்லிஸ், மோஹித் ரதி, ரிஷி தவான் ஆகியோர் உள்ளனர்.

லக்னெள அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட்க்கு பதிலாக யுத்வீர் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

இம்பேக்ட் வீரர்களாக அமித் மிஷ்ரா, ஜெயதேவ் உனத்கட், கிருஷ்ணப்பா கெளதம், ப்ரீராக் மங்கட், டேனியல் சாம்ஸ் ஆகியோர் உள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் இன்றைய போட்டியில் களமிறங்கும் ஹர்ப்ரீத் சிங் பாட்யா 10 ஆண்டுகள் 332 கழித்து ஐபிஎல் போட்டிகளில் களமிறங்குகிறார். இவர் இதற்கு முன்னதாக 2012 மே 29ஆம் தேதி ஐபிஎல் போட்டியில் கடைசியாக விளையாடினார்.

பஞ்சாப் அணி தனது முந்தைய போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக உள்ளூர் மைதானத்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து தோல்வியிலிருந்து மீண்டு வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

லக்னெள அணி ஆர்சிபி அணிக்கு எதிராக கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் கடைசியாக உள்ளூரில் விளையாடிய போட்டியிலும் சன் ரைசர்ஸ் அணியை வீழ்ததியது.

சொந்த மண்ணில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ள லக்னெள அணி, இன்று உள்ளூரில் நடைபெறும் போட்டியில் ஆதிக்கத்தை தொடரும் என எதிர்பார்க்கலாம்.

லக்னெள அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 3வது இடத்தில் நீடித்து வருகிறது. பஞ்சாப் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும்பட்சத்தில் பஞ்சாப் அணி நான்காவது இடத்துக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. 

 

 

டாபிக்ஸ்