தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Parliament : மணிப்பூர் விவகாரம்.. எதிர்கட்சிகள் கடும் அமளி - 4 ஆவது நாளாக இரு அவைகளும் ஒத்திவைப்பு!

Parliament : மணிப்பூர் விவகாரம்.. எதிர்கட்சிகள் கடும் அமளி - 4 ஆவது நாளாக இரு அவைகளும் ஒத்திவைப்பு!

Divya Sekar HT Tamil

Jul 25, 2023, 11:52 AM IST

மணிப்பூர் விவகாரத்தில், எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. (ANI)
மணிப்பூர் விவகாரத்தில், எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

மணிப்பூர் விவகாரத்தில், எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக குறுகிய நேர விவாதத்துக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டது. ஆனால் இந்த விவகாரத்தில் முதலில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக இருந்தன.

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Congress: ’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா!

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

 இந்த விவகாரத்தில் நேரக் கட்டுப்பாடின்றி அனைத்துக் கட்சிகளும் பேசி விவாதம் நடத்தவும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தின. இதுதொடர்பாக அமளி நீடித்ததால், கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இரு அவைகளும் எந்த அலுவலையும் கவனிக்காமல் முடங்கின.

மணிப்பூர் சம்பவம் தொடர்பாக நேற்று வரை மூன்று நாட்கள் எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கின. அந்த வகையில் 4ஆவது நாளான இன்று காலை 11 மணிக்கு அவைகள் கூடின.

மக்களவை கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு அமளியில் ஈடுபட்டன இதனால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நேற்று மணிப்பூர் விவகாரத்தில் எதிர்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிகழ்வின்போது ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவையின் மையப் பகுதிக்கு சென்று நாற்காலியை சுட்டிக்காட்டியதால் சபாநாயகரின் உத்தரவுகளை மீண்டும் மீறியதற்காக அவர் அமர்வு முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி