தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Stray Dog Attack : கொடூரம்.. வாய்பேச முடியாத சிறுனை கடித்து குதறிய தெரு நாய்கள்.. துடிதுடித்து உயிரிழந்த சோகம்!

Stray Dog Attack : கொடூரம்.. வாய்பேச முடியாத சிறுனை கடித்து குதறிய தெரு நாய்கள்.. துடிதுடித்து உயிரிழந்த சோகம்!

Divya Sekar HT Tamil

Jun 13, 2023, 10:52 AM IST

கேரளாவில் வாய்பேச முடியாத சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறியதில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் வாய்பேச முடியாத சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறியதில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் வாய்பேச முடியாத சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறியதில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் முழப்பிலங்ஙாடு பகுதியை சேர்ந்தவர் நௌஷாத் மற்றும் நுசீபா தம்பதி. நௌஷாத் பஹ்ரைனில் பணியாற்றி வரும் நிலையில் அவரின் மனைவி நுசீபா மற்றும் அவரது 10 வயதான மகன் நிஹால் ஆகியோர் கேரளாவில் வசித்து வந்துள்ளனர். சிறிதளவு மனம் குன்றியும், வாய்பேச முடியாத நிலையிலும் இருந்த சிறுவன் நிஹால் நேற்று மாலை 4.30 மணியளவில் வீட்டில் இருந்து விளையாடுவதற்காக வெளியே வந்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Congress: ’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா!

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

வழக்கமாக சிறிது நேரம் விளையாடிவிட்டு வரும் நிஹால் நேற்று வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் நுசீபா மகனை தேடியுள்ளார். ஆனால் வழக்கமாக சிறுவன் விளையாடும் இடத்தில் இல்லை. இதனால் பதறிப்போன அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நிஹாலை தேடிச்சென்றுள்ளனர். இந்நிலையில் நிஹாலின் வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் தெரு நாய்கள் கூட்டமாக வருவதை அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பார்த்துள்ளார்.

இதனை அடுத்து நாய்கள் வந்த திசையை நோக்கி சென்ற அந்த நபர் யாரும் இல்லாத வீடு ஒன்று இருப்பதை கண்டு அங்கு சென்று பார்த்துள்ளார்.அப்போது அங்கு சிறுவன் நிஹால் நாய்களால் கடித்து குதறப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். இதனை அடுத்து அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

அங்கு சென்ற உள்ளூர் வாசிகள் மற்றும் நிஹாலின் உறவினர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் உடல் முழுவதும் நாய்கள் கடித்து குதறியதில் நிஹால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைகேட்டு தாய்

கதறி துடித்த சம்பவம் அங்கு உள்ளவர்களிட்டையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை அதிகாரிகள், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகே எத்தனை நாய்கள் நிஹாலை கடித்துள்ளது என்ற தகவல் தெரிய வரும் எனக்கூறப்படுகிறது. மேலும் இன்று மதியம் நிஹாலின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

கேரளாவில் அடிக்கடி இதுபோன்று தெரு நாய்கள் கடித்து குழந்தைகள் இறக்கும் சம்பவம் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு என்னதான் தீர்வு என்ற வேதனை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சம்பவம் குறித்து ஊர் மக்கள் கூறுகையில் "தெரு நாய்களின் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி என அனைத்தையும் நாய்கள் கடித்துக் கொன்று விடுகிறது. தற்போது வாய் பேச முடியாத சிறுவனையும் கொன்று வேட்டையாடியுள்ளது என வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கூறுகையில், "தங்கள் ஊரில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்து விட்டது. வாய் பேச முடியாத நிஹாலால் நாய்கள் கடிக்கும்போது கத்தி கூச்சலிட முடியாத நிலையில் நாய்கள் கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழதான்” என மிகுந்த வேதனையுடன் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி