தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  குமரேசன் குடும்பத்தால் சிதம்பரம் எடுத்த முடிவு என்ன?

குமரேசன் குடும்பத்தால் சிதம்பரம் எடுத்த முடிவு என்ன?

Priyadarshini R HT Tamil

Mar 13, 2023, 01:01 PM IST

TV Serial: குமரேசன் குடும்பத்தால் சிதம்பரம் எடுத்த முடிவு என்ன என்பது குறித்த காட்சிதான் இன்று அமுதாவும், அன்னலட்சுமியும் சீரியலில் நடக்கிறது.
TV Serial: குமரேசன் குடும்பத்தால் சிதம்பரம் எடுத்த முடிவு என்ன என்பது குறித்த காட்சிதான் இன்று அமுதாவும், அன்னலட்சுமியும் சீரியலில் நடக்கிறது.

TV Serial: குமரேசன் குடும்பத்தால் சிதம்பரம் எடுத்த முடிவு என்ன என்பது குறித்த காட்சிதான் இன்று அமுதாவும், அன்னலட்சுமியும் சீரியலில் நடக்கிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். 

ட்ரெண்டிங் செய்திகள்

Director Elan on Star Movie: ‘அப்பாவுக்கு சமர்பிக்கிறேன்; அந்த சர்ப்ரைஸ மட்டும் வெளியே சொல்லாதீங்க’- ‘ஸ்டார்’ இயக்குநர்!

Aavesham OTT Review: ‘இந்தியாவிலேயே யாரும் அந்த மாதிரி.. இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா?- ஆவேசம் ஓடிடி விமர்சனம்!

Yuvan Shankar Raja Biopic: ‘நீ சிரிக்கின்ற போதிலும்’…வருகிறது யுவன் பயோபிக்.. டைரக்டர் யாரு தெரியுமா?

Karthigai Deepam Update: ‘ரம்யா கையைப்பிடித்த கார்த்திக்; பீரியட் தள்ளிப்போக மாத்திரை! - கார்த்திகை தீபம் அப்டேட்!

இன்றைய எபிசோடில், அமுதா பூஜையை முழுமையாக முடித்து மெட்டியை கொண்டு வருகிறாள். இதனால் ஊர்க்காரர்கள் சிதம்பரத்திடம், ‘நீ என்ன சொன்னாலும் சாமியே அந்த பொண்ணு தான் உன் மருமகன்னு சொல்லிருச்சு, நீ ஏத்துக்கிட்டு தான் ஆகனும்‘ என சொல்ல ஊர்க்காரர்கள் அமுதாவிடம் மெட்டியை, ‘உன் தம்பி கிட்ட குடுத்து போட்டு விடச் சொல்லும்மா‘ என சொல்கின்றனர். 

அமுதா மெட்டியையும், குங்குமத்தையும் செல்வாவிடம் கொடுக்க பழனி, உமா முறைத்துப் பார்க்க, செல்வா புவனாவிற்கு மெட்டி மாட்டி விடுகிறான். அடுத்து அனைவரும் அவர்களை ஆசிர்வாதம் செய்கின்றனர். செல்வா புவனாவிற்கு குங்குமம் வைத்து விடுகிறான். 

குமரேசன் ஆதரவாளர்கள், ‘அந்த பொண்ணுக்கு வழி சொல்லிட்டீங்க, குமரேசன் பொண்ணுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க‘ என கேட்க சிதம்பரம் என்னோட சொத்து பூராத்தையும் என் பொண்ணு உமா குடும்பத்துக்கு கொடுத்து விடுவதாக சொல்கிறார்.

உமா, ‘வேண்டாம் அப்புச்சி என சொல்ல சிதம்பரம் சொத்து பத்திரத்தை குமரேசனிடம் நீட்ட அனைவரும் கிளம்ப, சிதம்பரம் திடீரென மயக்கமடைந்து விழுகிறார். உடனே அமுதா அருகில் வர, ‘உமா உன்னால தான் அப்புச்சிக்கு இப்படி ஆயிடுச்சு‘ என திட்டுகிறாள். 

அடுத்து நாகு சிதம்பரத்திடம், ‘இப்பவாவது உங்களுக்கு தெரிஞ்சுச்சா என கேட்க, சிதம்பரம் மௌனமாக இருக்க நீங்க பாட்டுக்கு சொத்து பூராவையும் உமா குடும்பத்துக்கு எழுதி வச்சிட்டீங்க, நாங்க உங்களை நம்பித்தான இந்த வீட்டுக்கு வந்தோம் என கேட்டுக் கொண்டிருக்க, குமரேசன் குடும்பத்தினர் வந்து இறங்குகின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.