தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mgr Love: உலகப்போரால் வந்த வினை.. தங்கமாய் மாறிய மனைவி.. கருவில் கரைந்த எம்.ஜி.ஆர் முதல் குழந்தை! - தெரியா கதை!

MGR Love: உலகப்போரால் வந்த வினை.. தங்கமாய் மாறிய மனைவி.. கருவில் கரைந்த எம்.ஜி.ஆர் முதல் குழந்தை! - தெரியா கதை!

Apr 26, 2024, 06:00 AM IST

நல்லபடியாக கல்யாணம் முடிந்தது. தங்கமணி கர்ப்பமானார். இந்த நிலையில் தான் இரண்டாம் உலகப்போர் வந்தது. இதையடுத்து சென்னையில் குண்டு போட போகிறார்கள் என்ற தகவல் வேகமாக பரவ, தங்கமணி கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
நல்லபடியாக கல்யாணம் முடிந்தது. தங்கமணி கர்ப்பமானார். இந்த நிலையில் தான் இரண்டாம் உலகப்போர் வந்தது. இதையடுத்து சென்னையில் குண்டு போட போகிறார்கள் என்ற தகவல் வேகமாக பரவ, தங்கமணி கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

நல்லபடியாக கல்யாணம் முடிந்தது. தங்கமணி கர்ப்பமானார். இந்த நிலையில் தான் இரண்டாம் உலகப்போர் வந்தது. இதையடுத்து சென்னையில் குண்டு போட போகிறார்கள் என்ற தகவல் வேகமாக பரவ, தங்கமணி கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

எம்.ஜி.ஆரின் முதல் திருமணம் குறித்து பத்திரிகையாளர் சபிதா ஜோசப் ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேசி இருக்கிறார். 

ட்ரெண்டிங் செய்திகள்

Good Bad Ugly: கையில் டாட்டூ.. மாஸ் கூலர்.. 3 பரிணாமங்கள்.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Sobhita Dhulipala:‘தங்கத் தாரகை மகளே’ கேன்ஸ் விழாவில் தங்க ஆடையில் ஜொலித்த சோபிதா துலிபாலா: உடன் அந்த நடிகர் இருக்காரா?

Actress Madhoo: பாறையிலேயே உறக்கம், வெட்ட வெளியில் உடை மாற்றிய தருணம்! ஷுட்டிங்கில் நடந்த தர்மசங்கடம் - நடிகை மதுபாலா

Kamal Haasan: ‘தோனிய அப்படி கூப்பிடுறதுதான் சரியா இருக்கும்; டிக்சனரி புரட்டி புதுபெயர் கொடுத்த கமல்!-இது நல்லா இருக்கே!

இது குறித்து அவர் பேசும் போது, “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அப்போதுதான் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது அவருக்கு 200 முதல் 300 ரூபாய் வரை சம்பளம் இருந்ததாக சொல்லப்படுகிறது. 

அந்த சமுதாயத்தில், அவர் வால் டாக்ஸ் ரோட்டில், ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தார். அந்த வீட்டிற்கு 30 ரூபாய் வாடகை. ஒரு நாள் அவர் அங்கே உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அருகில் தண்ணீர் எடுத்து வரக்கூடிய ஒரு பெண், எம்ஜிஆரை ஜொல்லு விட, இதை பார்த்த எம்.ஜி.ஆர் அம்மா உடனடியாக எம்ஜிஆருக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று சொல்லி, கேரளாவிற்கு சென்று ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைத்து விட்டார். அவர் பெயர் தங்கமணி. அவர் மிக அழகாக இருப்பார். 

அப்போது எம்.ஜி.ஆர் காந்திய சிந்தனையில் மிகவும் வேரூன்றி இருந்தார். அதன் காரணமாக, எப்போதும் கதர் ஆடையை அணிந்து கொண்டிருந்தார். கல்யாணத்தின் பொழுதும், கதர் ஆடை அணிவேன் என்று ஒற்றைக் காலில் நின்றார். ஆனால் அதற்கு குடும்பத்தார்கள் அனுமதிக்கவில்லை. 

நல்லபடியாக கல்யாணம் முடிந்தது. தங்கமணி கர்ப்பமானார். இந்த நிலையில் தான் இரண்டாம் உலகப்போர் வந்தது. இதையடுத்து சென்னையில் குண்டு போட போகிறார்கள் என்ற தகவல் வேகமாக பரவ, தங்கமணி கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால் தங்கமணிக்கு எம்ஜிஆரை பார்க்காமல் மனது படபடத்தது. இதையடுத்து எம்ஜிஆருக்கு போன் செய்து எனக்கு பயமாக இருக்கிறது. உங்களை பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் . ஆனால், அந்த பயத்திலேயே அவருக்கு கருக்கலைந்து விட்டது.

அவரும் இறந்து விட்டார். ஒரு ஷூட்டிங் நடக்கும் பொழுது எம்ஜிஆருக்கு இந்த தகவல் வருகிறது. அவருடைய அண்ணன்மார்கள் வந்து அவரை அழைத்துச் சென்றார்கள். ஆனால் அவர் அங்கு செல்வதற்குள், தங்கமணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது இதனால் எம்ஜிஆர் அவரது முகத்தைக் கூட இறுதிக்கட்டத்தில் பார்க்க முடியவில்லை” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி