தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hari Hara Veera Mallu: முகலாயப் பேரரசை எதிர்க்கும் போர்வீரனாக பவன் கல்யாண்.. பாகுபலி சாயலில் ஓர் படம்

Hari Hara Veera Mallu: முகலாயப் பேரரசை எதிர்க்கும் போர்வீரனாக பவன் கல்யாண்.. பாகுபலி சாயலில் ஓர் படம்

Marimuthu M HT Tamil

May 02, 2024, 05:45 PM IST

Hari Hara Veera Mallu: பவன் கல்யாணின் நடிப்பில் உருவான ஹரிஹர வீரமல்லு படத்தின் டீஸரை தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர்.
Hari Hara Veera Mallu: பவன் கல்யாணின் நடிப்பில் உருவான ஹரிஹர வீரமல்லு படத்தின் டீஸரை தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர்.

Hari Hara Veera Mallu: பவன் கல்யாணின் நடிப்பில் உருவான ஹரிஹர வீரமல்லு படத்தின் டீஸரை தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர்.

Hari Hara Veera Mallu: பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் ஹரி ஹர வீர மல்லு என்னும் வரலாற்றுப் படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. படம் ஒரு கொடூர மன்னனைப் பற்றியும், அவரை எதிர்த்துப் போரிடும் வீரனைப் பற்றியுமான கதை எனக் கூறப்படுகிறது. இப்படத்தை தமிழின் முக்கியத் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். 

ட்ரெண்டிங் செய்திகள்

Karthigai Deepam: ‘ரம்யா காதலனுக்கு தீபா காதல் கடிதம்.. ஆப்பு வைத்த ஐஸ்வர்யா..’ - கார்த்திகை தீபம் அப்டேட்

Fact check: தீபிகா, ரன்வீர் சிங் குழந்தையின் சோனோகிராம் வைரல் புகைப்படம் உண்மையா? இத தெரிஞ்சுக்கோங்க!

Chef Venkatesh Bhat: ‘எனக்கு நன்றி கடன் முக்கியம் அதனால்தான்’ .. கடைசி நேரத்தில் காலை வாரிய தாமு! - வெங்கடேஷ் பட் பளார்

Actor Ramarajan: ‘அடுத்த படத்தில் கண்டிப்பா டூயட் உண்டு; கரகாட்டக்காரன் படத்தின் 2ம் பாகம் வருமா?’ - ராமராஜன் பேட்டி

தெலுங்கில் மாஸ் என்டர்டெய்னர்களுக்கு பெயர்போன ஹீரோ பவன் கல்யாண் மீண்டும் அதிரடியான படத்துடன் வந்துள்ளார். பவன் கல்யாண், இப்போது முகலாய சாம்ராஜ்யத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு பீரியட் ஆக்ஷன்-த்ரில்லரில் போர்வீரராக நடித்துள்ளார்.

இந்த படம் இப்போது இரண்டு பாகங்களாக வெளியிடப்படுவது மட்டுமல்லாமல், முதல் பாகத்திற்கு ஹரி ஹர வீர மல்லு பகுதி 1: வாள் vs ஸ்பிரிட் என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் கடந்த ஐந்து ஆண்டுகளாக கடந்துவந்த பாதையைக் காண்போம். 

அரசியலில் இருந்து பவன் கல்யாணை சினிமாவுக்குள் இழுத்த ஹரிஹர வீரமல்லு:

2019ஆம் ஆண்டில், அரசியலில் கவனம் செலுத்துவதற்காக திரைப்படங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக, பவன் கல்யாண் தெரிவித்தார். அவரை அணுகிய தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், அவரை வைத்து வரலாற்றுப் படத்தினை தயாரிக்க முன்வந்தார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின் கோவிட் ஊரடங்கு காரணமாக இடையில், இதன் படப்பிடிப்பு தடைபட்டது. அதன்பின், 2021ல் மீண்டும், இப்படத்தின் சூட்டிங் தொடங்கியது. 

இதற்கிடையே, நடிகர் பவன் கல்யாண், சாகர் கே சந்திராவின் இயக்கத்தில் பீம்லா நாயக் படத்தில் நடித்தார். ஹரி ஹர வீர மல்லுவின் முதல் பார்வை அதே ஆண்டு வெளியிடப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, பவன் கல்யாண், தனது தற்காப்பு கலை திறன்களை திரையில் காட்டியிருக்கிறார் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தாமதமான ரிலீஸ் தேதி:

ஹரி ஹர வீர மல்லு ஆரம்பத்தில் ஜனவரி 14, 2022அன்று வெளியிட திட்டமிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் 29-க்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், கொரோனா தொற்றுநோய் மற்றும் பவனின் அரசியல் பணிகள் காரணமாக, ஹரிஹர வீரமல்லுவின் தயாரிப்பில் பல தாமதங்களை ஏற்படுத்தின. ஆகஸ்ட் 2022-ல் ரத்னம் படம் மார்ச் 30, 2023அன்று வெளியிடப்படும் என்று அறிவித்தார். மீண்டும், ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. தெலுங்கில் வெளியான ஹரிஹர வீரமல்லு தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. படத்தின் டிஜிட்டல் உரிமைகள் அமேசான் பிரைம் வீடியோவுக்கு விற்கப்பட்டன. புதிய ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

படம் கைவிடப்படுவதாக வதந்திகள்:

ஒரு நீண்ட மௌனத்திற்குப் பிறகு, ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், படம் ரிலீஸுக்குத் தயார் நிலையில் இருப்பதாகவும், பவன் ஆந்திர மாநில தேர்தலுக்கான பிரசாரத்தை முடித்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தினார்.

"ஹரி ஹர வீர மல்லு தெலுங்கு மாநிலங்களில் மட்டுமின்றி நாடு முழுவதும் அவரை பவர் ஸ்டாராக அறிய வைக்கும். பார்ட் ஒன் மட்டுமில்ல, ஹரி ஹர வீர மல்லு படத்துக்கும் பார்ட் டூ இருக்கு. படம் கைவிடப்பட்டதாக ஒரு இணையதளம் கூறியதை நான் பார்த்தேன். நான் பதிலளித்திருந்தால், அது ஒரு பிரச்னையாக இருந்திருக்கும்’’ என்று இதுதொடர்பாகப் பேசியுள்ளார்.

இயக்குநர் கிரிஷுக்கு பதிலாக ஜோதி கிருஷ்ணா பொறுப்பேற்பு:

படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தனது வார்த்தைக்கு உண்மையாக இருந்தபோதிலும், படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்படும் என்று இன்று தான்(மே 2) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தவிர ஹரி ஹர வீர மல்லுவின் உலகத்தைப் பற்றிய டீஸரையும் வெளியிட்டார். இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்குநராக இருக்கிறார் எனப் படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்பு, இப்படத்தின் பெரும்பான்மை காட்சிகளை, கிரிஷ் ஜகர்லமுடி எடுத்துள்ளார்.

மேலும் ஜோதி கிருஷ்ணா, எனக்கு 20 உனக்கு 18 என்னும் தமிழ்ப்படம், நீ மனசு நாக்கு தெலுசு மற்றும் ஆக்ஸிஜன் அண்ட் ரூல்ஸ் ரஞ்சன் போன்ற தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார். மேலும், இயக்குநர் ஜோதி கிருஷ்ணா, நட்புக்காக மற்றும் படையப்பா போன்ற படங்களுக்கு எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹரி ஹரா வீர மல்லு படத்தில் பாபி தியோல், நிதி அகர்வால், விக்ரம்ஜீத் விர்க், நோரா ஃபதேஹி, நர்கிஸ் ஃபக்ரி, ஜிஷு சென்குப்தா, புஜிதா பொன்னாடா, தலிப் தஹில், சச்சின் கேடேகர், ரகு பாபு மற்றும் சுப்புராஜு ஆகியோர் நடித்துள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், கிரிஷ் அனுஷ்கா ஷெட்டியுடன் காதி என்ற படத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து வருகிறது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி