தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Andal Jayanti 2023: குழந்தை பாக்கியம் தரும் ஆடிப்பூரம் ஆண்டாள் வழிபாடு

Andal Jayanti 2023: குழந்தை பாக்கியம் தரும் ஆடிப்பூரம் ஆண்டாள் வழிபாடு

Jul 22, 2023, 11:55 AM IST

ஆடிப்பூரத் திருநாளில் ஆண்டாளை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
ஆடிப்பூரத் திருநாளில் ஆண்டாளை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

ஆடிப்பூரத் திருநாளில் ஆண்டாளை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

அம்மனுக்கு மிகவும் விசேஷ மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. இந்த மாதத்தில் பூரம் நட்சத்திர நாளை ஆடிப்பூரம் என்ற பெயரில் அம்மன் கோயில்களில் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு மிகவும் அதிகமாக நடக்கும்.

சமீபத்திய புகைப்படம்

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM

சூரியனின் பண வெயிலில் காயப் போகும் ராசிகள்.. அக்னியாக கொட்டும் ராஜயோகம்.. வருகிறது அதிர்ஷ்டம்

May 18, 2024 02:06 PM

மக்களுக்காகப் பூமியில் அவதரித்த அம்மன், ஆடிப்பூரத் திருநாளில் பூப்படைந்தார் எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாக ஆடிப்பூரத் திருநாளில் தொடர்ந்து பத்து நாட்கள் அம்மன் ஒவ்வொரு கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.

இந்த திருநாளில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படும். இந்நாளில் வேண்டுதல் இருக்கும் பெண்கள் வளைகாப்பு கலந்து கொண்டு அம்மனுக்கு வலையில் வாங்கி கொடுத்து அதிலிருந்து இரண்டு வாங்கி நீங்கள் அணிந்து கொண்டால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் எனக் கூறப்படுகிறது.

அதேபோல நம் வேண்டுதலுக்கு ஏற்ப திருமண பாக்கியம் உண்டாகும் என்பதும் ஐதீகமாகக் கூறப்படுகிறது. தனது கணவனின் நலனை வேண்டி விரதம் இருக்கும் பெண்கள் இந்நாளில் விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலியாக இருக்கும் வரம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த திருநாளில் ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், புடவை, வெற்றிலை பாக்கு பணம் வைத்துக் கொடுத்தால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும். இந்த சிறப்பான நாளில் வயதில் மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், புடவை, வெற்றிலை பாக்கு, பணம் வைத்துக் கொடுத்து ஆசீர்வாதம் பெறுவதை இளம்பெண்கள் வழக்கமாக வைத்துள்ளனர். அது அதீத நன்மைகளைக் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.

எந்த கோயிலாக இருந்தாலும் சரி அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால் கேட்ட வரம் கிடைக்கும், செல்வச் செழிப்போடு வாழ்வார்கள் என்பது ஐதீகமாகக் கூறப்படுகிறது.

ஆடிப்பூர திருநாளில் விரதம் இருந்து அம்மன் கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள், தங்கள் வீட்டுப் பூஜை அறையில் இருக்கும் அம்மன் படத்திற்கு முன்பு வளையல், பட்டு வஸ்திரம், பூக்கள் உள்ளிட்டவற்றை படைத்து வழிபாடு செய்யலாம்.

இந்த ஆடிப்பூர் திருநாளில் திருமணம் ஆகாத பெண்கள், ஆண்டாளை வணங்கி விரதம் இருந்து வழிபாடு செய்தால் விரைவில் திருமண பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம் ஆகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

அடுத்த செய்தி