Kanchipuram : வேலைக்குச் செல்ல வேண்டாம் என கணவர் கண்டிப்பு – விரக்தியில் 3 வயது குழந்தையுடன் தூக்கில் தொங்கிய பெண்
வேலைக்குச் செல்ல வேண்டாம் என கணவர் கண்டித்ததால் 3 வயது குழந்தையுடன் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செட்டிகுளம் என்ஜி.ஓ. நகர் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (30). இவர், சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஒட்டி வருகிறார். இவருடைய மனைவி சரண்யா (24). இவர்களுடைய மகன் ஜிஷ்ணு (3)
ட்ரெண்டிங் செய்திகள்
சரண்யா, என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன் நினைவுத் திறன் வளர்க்கும் பயிற்சி மையத்தில் வேலைக்கு சென்று வந்தார். ஆனால் அவர் வேலைக்கு சென்றால் குழந்தையை கவனிக்க முடி யாது என்பதால் மதன்குமார். தனது மனைவி சரண்யாவை வேலைக்கு செல்ல வேண்டாம் எனக்கூறி கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சரண்யா, தனது வீட்டில் யாரும் இல்லாதபோது அறையில் தனது குழந்தை ஜிஷ்ணுவை தூக்கில் தொங்க விட்டுவிட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காஞ்சி போலீசார் சரண்யா,
குழந்தை ஜிஷ்ணுவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மதன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
டாபிக்ஸ்