தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tiruppur: வேன் மீது லாரி மோதிய பயங்கர விபத்து - 5 பேர் பலி மேலும் பலர் படுகாயம்

Tiruppur: வேன் மீது லாரி மோதிய பயங்கர விபத்து - 5 பேர் பலி மேலும் பலர் படுகாயம்

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 26, 2023 12:50 PM IST

குடும்பத்துடன் கொடுமுடியில் திதி கொடுத்து விட்டு வீடு திரும்பியபோது விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வாலிபனங்காடு பகுதியில் வந்து கொண்டிருந்த வேன்மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்துடன் கொடுமுடியில் திதி கொடுத்து விட்டு வீடு திரும்பியபோது விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் விகாஸ், கல்யாண், கல்யாண் ராம் இறுதி ஆண்டு படித்து வந்தனர். இந்நிலையில் மாணவர்கள் 3 பேரும் சித்தூரில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு பிறந்தநாள் கொண்டாடிவிட்டு குப்பத்திற்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சின்னசெட்டி பள்ளி அருகே கார் சென்றபோது லாரி மீது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் மாணவர்கள் 3 பேரும் காரின் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்