தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai Murder : இன்ஸ்டா காதல்.. பிறந்தநாள் அன்று ஆசையாக காதலியை சந்தித்த இளைஞர்..கடைசியில் பறிபோன உயிர்!

Chennai Murder : இன்ஸ்டா காதல்.. பிறந்தநாள் அன்று ஆசையாக காதலியை சந்தித்த இளைஞர்..கடைசியில் பறிபோன உயிர்!

Divya Sekar HT Tamil
Apr 17, 2023 12:08 PM IST

காதலியை தேடி சென்னை சென்ற திருப்பூர் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டா காதல்
இன்ஸ்டா காதல்

ட்ரெண்டிங் செய்திகள்

சிலர் சமூக வலைதள பக்கத்தில் மூழ்கி பலருடன் பேசி காதல் வயப்பட்டு ஏமாந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். இல்லை என்றால் கொலையில் முடிகிறது. தற்போது இன்ஸ்டாவால் சென்னையில் சிறுமி ஒருவரால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை சேர்ந்தவர் சஞ்ஜீவ்குமார் (18). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இந்தநிலையில் சஞ்ஜீவ்குமார் தனது பிறந்தநாளையொட்டி, காதலியை நேரில் சந்தித்து பேசுவதற்காக சென்னைக்கு சென்றுள்ளார்.

அங்கு தனது காதலியுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று காதலிக்கு தேவையான பொருட்களையும் வாங்கி கொடுத்துள்ளார். இதனிடையே சஞ்ஜீவ்குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சஞ்ஜீவ்குமாரிடம் விசாரணை நடத்திய போது தான் காதலியை தேடி சென்னைக்கு வந்ததாகவும், காதலி தந்த குளிர்பானத்தை குடித்ததில் இருந்து தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், குளிர்பானத்தில் விஷம் கலக்கப்பட்டதாகவும் மரண வாக்குமூலம் அளித்தார்.

தொடர்ந்து சஞ்ஜீவ்குமாருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது காதலி யாரென்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக சஞ்ஜீவ்குமார் தனது காதலியுடன் சென்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிய காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அதில் அவர் தனது காதலியுடன் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

அதனை வைத்து சிறுமியை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் சஞ்ஜீவ்குமாரின் பெற்றோரும் தனது மகன் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்