தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Thiruvallur: நிர்வாணமாகக் கிடந்த இளம்பெண் - 50 இடங்களில் பிளேடால் வெட்டிய காயம்!

Thiruvallur: நிர்வாணமாகக் கிடந்த இளம்பெண் - 50 இடங்களில் பிளேடால் வெட்டிய காயம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 14, 2023 01:05 PM IST

உடலில் 50 இடங்களில் பிளேடால் வெட்டிய காயங்களுடன் இளம்பெண் ரயில்வே நிலையத்தில் நிர்வாணமாகக் கிடந்துள்ளார்.

நிர்வாணமாகக் கடந்த இளம்பெண்
நிர்வாணமாகக் கடந்த இளம்பெண்

ட்ரெண்டிங் செய்திகள்

சட்டரீதியாகக் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும் கொடூரமான பாலியல் கொடுமைகள் நடந்து வருகின்றன. இதில் அதிகம் பாதிக்கப்படுவது சிறுமிகளும், இளம்பெண்களும் தான்.

 பாலியல் வன்கொடுமை செய்த பின்பும், மிகவும் கொடூரமாக அவர்கள் தாக்கப்படுகின்றனர் அதுதான் இதில் மிகவும் கொடுமையான விஷயம். அப்படி ஒரு சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

பயணிகளின் கூட்டத்தால் திருவள்ளூர் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். அப்படி நேற்று இரவு 9 மணி அளவில் ரயில் நிலையத்தில் மூன்றாவது நடைமேடையில் இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

மேலும் அவரது உடல் முழுவதும் சுமார் 50 இடங்களில் பிளேடால் அறுக்கப்பட்டுள்ளது. கை, கால்கள், முகம் என உடலில் உள்ள அனைத்து இடங்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் திருவள்ளூர் ரயில் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த இளம் பெண்ணை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் இருந்த அந்த இளம் பெண்ணுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து விசாரணையில், நிர்வாணமாக பிளேடால் கிழிக்கப்பட்டு ரயில்வே நிலையத்தில் கிடந்த இளம் பெண் அண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் அம்பத்தூரைச் சேர்ந்த ஒருவருடன் திருவள்ளூர் வந்ததாகக் கூறப்படுகிறது.

அதற்குப் பிறகு அந்த இளம் பெண் நிர்வாணப்படுத்தப்பட்டு உடல் முழுவதும் பிளேடால் கிழிக்கப்பட்டு ரயில்வே நிலையத்தில் கடந்துள்ளார். அந்த இளம் பெண்ணுடன் வந்த வாலிபர் தற்போது தலைமறைவாகி விட்டதால் இருவருக்குள் என்ன நடந்தது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்போது அந்த வாலிபரைப் படிப்பதற்காக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிளேடால் உடல் முழுவதும் கிழிக்கப்பட்டு நிர்வாண நிலையில் ரயில்வே நிலையத்தில் இளம் பெண் கிடந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்