Balveer Singh Issue : பல் பிடுங்கிய விவகாரம் - மேலும் 3 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு!
Tooth Extraction Case : பல் பிடுங்கிய விவகாரத்தில் மேலும் 3 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களை, அங்கு பணியாற்றிய உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் காவல் துறையினர் பல் பிடுங்கி துன்புறுத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதனையடுத்து அம்பாசமுத்திரம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த சில காவலர்கள் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவுப்படி, சேரன்மாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை மேற்கொண்டார். அவர், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் -ஐ உயர்மட்ட விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. அப்போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே உதவி ஆட்சியரிடம் வாக்குமூலம் அளித்தவர்களில் ஒரு சிலர் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி நடந்தவற்றை கூறினர். அதனை அவர் பதிவு செய்து கொண்டார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் 3 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேத நாராயணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவலர்கள் மணிகண்டன், விக்னேஷ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகியோர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9