தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சத்தியமங்களத்தில் அவசரமாக தரையிறங்கிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஹெலிகாப்டர்: நடந்தது ?

சத்தியமங்களத்தில் அவசரமாக தரையிறங்கிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஹெலிகாப்டர்: நடந்தது ?

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 25, 2023 12:44 PM IST

சத்தியமங்களத்தில் அவசரமாக ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டுள்ளது.

கோப்பு படம்
கோப்பு படம்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 1981 ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் நிறுவப்பட்டது வாழும் கலை என்ற அமைப்பு. கல்வி மற்றும் மனித நேய மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருவது மட்டுமன்றி, மானிட சேவை மற்றும் சுய முன்னேற்றம் ஆகியவற்றிற்காக உழைத்து வருவதாக வாழும் கலை அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள 152 நாடுகளில் கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது இதில் 37 கோடி மக்கள் பயனடைவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

"நமது சமுதாய மக்களின் மனங்களை அழுத்தும் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு, வன்முறைகளிலிருந்து விலகியிருக்கும் சமுதாயம் அமையும் வரை உலக அமைதி என்பது கைக்கு எட்டாததாக இருக்கும் " . மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் பல வழிமுறைகளை வாழும் கலை அமைப்பு கற்றுத் தருவதாகவும் அதில் மூச்சுப் பயிற்சிகள், தியானம் மற்றும் யோகப் பயிற்சிகளும் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஏராளமானோர் ஸ்ரீஸ்ரீ ரவி சங்கரின் வாழும் கலை அமைப்பின் பயிற்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பயணித்த ஹெலிகாப்டர்
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பயணித்த ஹெலிகாப்டர்

இந்நிலையில் இன்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பெங்களூருவில் இருந்து திருப்பூர் வந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக சத்தியமங்கலம் அருகே கடம்பூர் வனப்பகுதியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட செய்திகள் வெளியாகி உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்