தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime: இளைஞருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த மாமியார் .. தட்டிக்கேட்ட மருமகனுக்கு நேர்ந்த துயரம்!

Crime: இளைஞருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த மாமியார் .. தட்டிக்கேட்ட மருமகனுக்கு நேர்ந்த துயரம்!

Karthikeyan S HT Tamil
Aug 14, 2023 10:40 AM IST

மாமியாரின் கள்ளக்காதலனை தட்டிகேட்ட மருமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோப்புபடம்
கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் கோமதிக்கும், குருசுக்குப்பத்தை சேர்ந்த தேவா (23) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தாக கூறப்படுகிறது. தேவா, கோமதி வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதாகவும் தெரிகிறது. மேலும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த மருமகன் முகுந்தன், தேவாவை கண்டித்து எச்சரித்து உள்ளார். இதனால் தேவாவுக்கு முகுந்தனுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முகுந்தன் மனைவி ரம்யாவுடன் புதுச்சேரியில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் பார்த்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது மாமியார் வீட்டில் தேவா இருந்ததைக் கண்டு ஆத்திரம் அடைந்த முகுந்தன் அவரிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தேவா அங்கிருந்து சென்றுவிட்டார்.

விடுமுறை தினமான நேற்று அதிகாலை 4 மணியளவில் மீண்டும் தேவா, முகுந்தனின் வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தேவா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகுந்தனை சரமாரியாக குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரம்யா, அங்கேயே மயங்கி விழுந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முகுந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுச்சேரி பேருந்து நிலையத்தில் பதுங்கி இருந்த தேவாவை கைது செய்தனர். மாமியாரின் கள்ளக்காதலனை தட்டிகேட்ட மருமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்