செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல்! இதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை!
சற்று முன் செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று பிற்பகல் 2.15 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில் பாலாஜி நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதற்கிடையில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சு வலி ஏற்பட்டு கதறி துடித்தார். அதுகுறித்த வீடியோக்கள் செய்திகளில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அவரது காது பகுதியில் வீக்கம் உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல அமைச்சர்கள் இன்று அதிகாலை முதல் ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று நலம் விசாரித்ததாகவும், தார்மீக ஆதரவையும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில் சற்று முன் செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று பிற்பகல் 2.15 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் செந்தில் பாலாஜிக்கு ஆன்ஜியோகிராம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்படுவது குறித்து எய்ம்ஸ் மருத்துவர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்
டாபிக்ஸ்