தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Viral: வேற லெவல் அலப்பறை..7 அடி பாம்பை தோளில் போட்டுக்கொண்டு மது வாங்க வந்த முதியவர்!

Viral: வேற லெவல் அலப்பறை..7 அடி பாம்பை தோளில் போட்டுக்கொண்டு மது வாங்க வந்த முதியவர்!

Karthikeyan S HT Tamil
May 18, 2023 09:49 AM IST

Chengalpattu: பாம்பை தோளில் போட்டுக் கொண்டு பாஸ்மாக் கடைக்கு வந்த மதுப்பிரியரால் பரபரப்பு ஏற்பட்டது.

மது வாங்க வந்த முதியவர்
மது வாங்க வந்த முதியவர்

ட்ரெண்டிங் செய்திகள்

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூரைச் சேர்ந்தவர் சங்கர். இவர் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைக்கு நேற்று மாலை வந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், சுமார் 7 அடி உயரம் கொண்ட சாரை பாம்பு ஒன்றை தோளில் போட்டுக்கொண்டு நண்பர் ஒருவருடன் அவர் மது வாங்க இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது, அங்கு மது வாங்க வந்த சக மதுபிரியர்கள் அலறியடித்தபடி அவருக்கு வழிவிட்டு ஓடினர்.

இதனிடையே பாம்பை லாவகமாக பிடித்து சிறிது நேரம் வேடிக்கை காட்டி இருக்கிறார். மேலும், அந்த பாம்பை அவர் அணிந்திருந்த லுங்கியில் போட்டு மடித்துக் கட்டிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஏறி சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னர் அந்த பாம்பை புலிப்பாக்கம் அருகே கொள்வாய் ஏரி அருகேயுள்ள முட்புதரில் விட்டு விட்டார். இது குறித்து அவர் கூறுகையில், வரும் வழியில் பாம்பு குறுக்கே ஓடியதால் அவை வாகனங்களில் சிக்கி உயிரிழக்ககூடாது என்ற எண்ணத்தில் பிடித்துக்கொண்டு வந்து பாம்பின் உயிரை காப்பாற்றியதாக தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

சினிமா பட பாணியில் பாம்பை தோளில் போட்டுக் கொண்டு பாஸ்மாக் வந்த மதுப்பிரியரால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்