EPS Highways Tender Case: ரூ.4,800 கோடி முறைகேடு.. இபிஎஸ்க்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ. 4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தக்கோரி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு சிபிஐ விசாரணை நடத்தலாம் என அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடைவிதித்து மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டியதில்லை எனவே சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணை நடந்தது. இந்த வழக்கை திரும்ப பெற அனுமதிக்குமாறு ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரப்பட்டது. அதாவது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றமில்லை என 2018 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் ஏற்கவில்லை. எனவே அவர்கள் மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேநேரம், ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணை முடித்து தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணை முடித்து தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீது புதிய விசாரணை தொடங்குமா? அல்லது ஏற்கனவே உள்ள ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்படையில் இபிஎஸ் மீது மனு விசாரணை தொடங்குமா? என்பது குறித்த முக்கிய உத்தரவுகள் இன்று பிறப்பிக்கப்படுமம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்