Tamilisai: ’தாத்தா, அப்பா பதவியை அனுபவிப்பவர் அப்படித்தான் பேசுவார்’ உதயநிதிக்கு தமிழிசை பதிலடி!
”திமுக தொண்டர்கள் கூட இது என்ன உங்க அப்பன் வீட்டு கட்சியா என்று கூட கேட்கலாமா? தமிழிசை கேள்வி”
கோவை விமான நிலையத்தில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஸ்ரீரங்கம் கோயில் கருவறைக்கு பக்கத்தில் நடந்த மோதல் சம்பவம் கண்டனத்திற்குரியது. வெளிமாநில பக்தர்கள் சண்டை போட்டார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒவ்வொரு கோயிலும் முறையான நிர்வாகம் நடைபெறவில்லை என்பதை ஸ்ரீரங்கம் சம்பவம் எடுத்துக்காட்டாக உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்து மதத்தின் மீது தாக்குதல் என இதனை நான் நினைக்கின்றேன். வேறு மாநிலத்தில் இருந்து நமது மாநிலத்திற்கு வருபவர்களுக்கு முறையான பாதுகாப்பை அளிக்க வேண்டும்.
தேசவிரோத கருத்துக்களை பகிர்வதற்கு திமுகவினர் பெரியாரை கேடயமாக பயன்படுத்துகிறார்கள். தவறான இடத்தில் பெரியாரை இவர்கள் அவமரியாதை செய்துவிட்டு, மற்றவர்கள் அவமரியாதை செய்கிறார்கள் என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
'மத்திய அரசிடம் அவர்கள் அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம்’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவரின் தாத்தா பதவியை, அப்பா பதவியை அனுபவித்துக் கொண்டிருப்பவர் அப்படித்தான் பேசுவார். சாதாரண திமுக தொண்டர்கள் கூட இது என்ன உங்க அப்பன் வீட்டு கட்சியா என்று கூட கேட்கலாமா?; கலைஞர் உரிமைத் தொகை என்று பெயர் வைக்கிறார்களே, அது என்ன உங்கள் வீட்டு பணத்தையா எடுத்து கொடுக்கிறீர்கள் என நாங்கள் கேட்கலாம்.
உதயநிதி வார்த்தைகளை அடக்கவில்லை என்றால் அவரை எதிர்மறை தலைவராகத்தான் இந்தியா கூட்டணியும், திமுகவும் எதிர்க் கொள்ளப்போகிறது. கலைஞர் அவர்கள் இப்படியே பேசினார். திட்டுவதாக இருந்தாலும் அழகு தமிழில் பேசுங்கள் என தமிழிசை கூறினார்.
டாபிக்ஸ்