பயங்கரம்..போன் பேசியதால் விபரீதம்.. ரயிலில் அடிபட்டு உடல் சிதறி மாணவி பலி!
தாம்பரம் அருகே போன் பேசி கொண்டே தண்டவாளத்தை கடந்த மாணவி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
சென்னை : கேரளாவை சேர்ந்த நிகிதா என்ற பெண் சென்னையில் தங்கி எம்சிசி கல்லூரியில் படித்து வந்தார். மாணவி நிகிதா பிஎஸ்சி சைக்காலஜி படித்து வந்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்நிலையில், மாணவி நிகிதா தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது மாணவி நிகிதா(19) போன் பேசிய படி சென்றதால் ரயில் வருவதை கவனிக்கவில்லை.
இதையடுத்து அவ்வழியாக வந்த குருவாயூர் விரைவு ரயில் நிகிதா மீது மோதியது. இதில் நிகிதா தூக்கி வீசப்பட்டு சம்பயிடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த போது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம், பெருங்குளத்தூரில் இ்துபோன்று தொடர் விபத்து நடப்பது மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்