தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Find Jobs Here Jobs Here On Railway And High Court

Job Alert: உயர் நீதிமன்றம் முதல் ரயில்வே வரை என்ன வேலை?

Priyadarshini R HT Tamil
Mar 03, 2023 02:48 PM IST

Job Opportunities: இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பாட்னா உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள இடங்களுக்கும் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

பணி: பொறிளாளர்(சிவில்)

காலியிடங்கள்:10 (UR-7,EWS-1,SC-2)

சம்பளம்: மாதம் ரூ. 40,000 -1,40,000

வயது வரம்பு: 1.2.2023 தேதியின்படி 32 வயதிற்குள்ள இருக்க வேண்டும். வயது வரம்பில் சலுகை கோரும் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ. 40,000 – ரூ.1,40,000

கல்விதகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

பணி அனுபவம், எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ. 600, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை:

http://www.rites.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.3.2023 ஆகும். 

உயர்நீதிமன்றத்தில் குரூப்-பி வேலை

பாட்னா உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் (குரூப்-பி) பணியிடங்களுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant (Group-B Post)

காலியிடங்கள்: 550

சம்பளம்: ரூ.44,900 - ரூ.1,42,400

வயது வரம்பு: 1.1.2023 தேதியின்படி 18 முதல் 37 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் குறைந்தது 6 மாத கால கம்ப்யூட்டர் அப்ளிகேசன் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கொள் குறிவகை கேள்விகளைக் கொண்ட முதற்கட்டத்தேர்வு, விரிவான விடையளிக்கும் வகையிலான கேள்விகளைக் கொண்ட இரண்டாம் கட்டத்தேர்வு, கம்ப்யூட்டர் திறனறிவுத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முதற்கட்டத்தேர்வு 30.04.2023 அன்று பிகாரில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு ரூ.600ம், மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.1200ம் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.patnahighcourt.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 7.3.2023

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்