எம்எல்ஏவாக ஈ.வி.கே.எஸ். பதவியேற்பு! காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை உயர்வு
Congress MLA Elangovan:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று சட்டமன்ற உறு்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில், எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
ட்ரெண்டிங் செய்திகள்
சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று சட்டமன்ற உறு்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடந்து முடிந்தது. காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உள்ளிட்ட மொத்தம் 77 பேர் போட்டியிட்டனர்.
நடந்து முடிந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 02ம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், இன்று காலை எம்.எல்.ஏவாக பதவியேற்றார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 38 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்