தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Erode : Karunanidhi's Rule Of Rape? What Does Ponnaiyan Say!

Erode : கற்பழிப்பு மிகுந்த ஆட்சி கருணாநிதி ஆட்சி? என்ன சொல்கிறார் பொன்னையன்!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 09, 2023 02:36 PM IST

திமுக ஆட்சி கருணாநிதி ஆட்சியைப் போல ஊழல் மிக்க ஆட்சியாக, கற்பழிப்பு மிகுந்த, களவு நிறைந்த கொலைகள் நிறைந்த ஆட்சியாக இருப்பதாகவும், சுயநலத்துடன் செயல்படும் ஆட்சியாக ஸ்டாலினின் ஆட்சி இருந்து வருகிறது. இதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள் என்று பொன்னையன் விமர்சித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவேரா திருமகன் மறைவையடுத்து வரும் பிப்ரவரி 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையல் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும் வேப்பம்பாளையம் பகுதியில் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர், "இந்த கிழக்கு தொகுதியில் செல்வாக்கு பெற்ற நபராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கின்றார்; அதிமுகவினர் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றோம்; மக்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார். மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கிறது எனவும், அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி செயல்திறன் மிக்க முதலமைச்சராக இருந்தவர் எனவும், ஆனால் தற்பொழுது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடக்கும் திமுக ஆட்சி கருணாநிதி ஆட்சியைப் போல ஊழல் மிக்க ஆட்சியாக, கற்பழிப்பு மிகுந்த, களவு நிறைந்த கொலைகள் நிறைந்த ஆட்சியாக இருப்பதாகவும், சுயநலத்துடன் செயல்படும் ஆட்சியாக ஸ்டாலினின் ஆட்சி இருந்து வருகிறது. இதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள் எனவும் இரண்டாண்டுகளில் இந்திய அளவில் இவ்வளவு கெட்ட பெயர் எடுத்த மாநில அரசுகள் எதுவும் இருக்காது அந்த அளவிற்கு இப்போதைய ஆட்சி இருப்பதாகவும், கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தார். மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றால் தொழில் துறையினர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அப்போது டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னம் குறித்து பேசியது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு திரு.ஸ்டாலின் மட்டும்தான் பொய் சொல்லும் மன்னரா? ஸ்டாலினுக்கு ஈடாக என்னாலும் பொய் சொல்ல முடியும் என தினகரன் பொய்யை உரைக்கிறார் என போடுங்கள் என பதில் அளித்தார். மேலும் டிடிவி இப்படி பேசுவது மர்மம் அவர் இரட்டை இலை மீது பற்றற்றவர். ஜெயலலிதா மீது பற்றற்றவர். அவருக்கும் இரட்டை இலைக்கும் சம்பந்தமில்லை. அவருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை. அவரது கூற்றுக்கும் முக்கியத்துவம் தேவையில்லை என்றும் பொன்னையன் தெரிவித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்