தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps Vs Ops: ’அதிமுகவை பழனிசாமியின் தாத்தா ஆரம்பிக்கவில்லை’! ஓபிஎஸ் பதிலடி!

EPS Vs OPS: ’அதிமுகவை பழனிசாமியின் தாத்தா ஆரம்பிக்கவில்லை’! ஓபிஎஸ் பதிலடி!

Kathiravan V HT Tamil
Feb 24, 2023 01:42 PM IST

சின்னமாவையும், பன்னீர் செல்வத்தையும் டிடிவியையும் எக்காரணத்தை கொண்டு நாங்கள் சேர்க்கமாட்டோம் என்று சொல்கிறார். இவர் ஆரம்பித்த கட்சியா இது; இல்லை இவர் தாத்தா ஆரம்பித்த கட்சியா? - ஓபிஎஸ் கேள்வி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்

ட்ரெண்டிங் செய்திகள்

நாங்கள் மக்களை நாடி செல்லும் நிலையில் உள்ளோம், உறுதியாக மக்கள் மன்றத்தில் நீதி கேட்போம். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகியோர் 50 ஆண்டுகாலம் உயிரை கொடுத்து இந்த இயக்கத்தை காப்பாறி இருக்கிறார்கள்.

நிரந்தர பொதுச்செயலாளர் அம்மாதான்

இரு தலைவர்களும் கடைப்பிடித்த சட்டவிதியை காப்பாற்றுவதற்காக நாங்கள் போராடி கொண்டு இருக்கிறோம். அம்மாதான் நிரந்தர பொது செயலாளர் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். அதனை ரத்து செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது.

கட்சியை கைக்குள் வைக்க முயற்சி

ஓபிஎஸ், ஈபிஎஸ்,
ஓபிஎஸ், ஈபிஎஸ்,

கூவத்தூரில் நடந்தது போல் கட்சியை கைப்பற்றி தன் கைக்குள் வைத்து கொள்ள நினைக்கிறார்கள். இது ஓபிஎஸ் தாத்தா மாடசாமி தேவரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி அல்ல; பழனிசாமியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல; தொண்டர்களுக்காக எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி.

உச்சநீதிமன்ற தீர்ப்பால் பின்னடைவு இல்லை

இதற்கு விடிவு வரும் வரை நாங்கள் உச்சநீதிமன்றத்தில் போராடுவோம், மக்கள் மன்றத்தை நாடி செல்ல எங்கள் படை தயாராகிவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை; தீர்ப்புக்கு பிறகே எங்கள் தொண்டர்கள் இன்னும் எழுர்ச்சியோடு உள்ளார்கள்

ரகசியங்கள் வெளியே வரும்

திமுகவின் பி டீம் என ஈபிஎஸ் விமர்சித்ததுள்ளது குறித்த கேள்விக்கு, ”எவனோ கிறுக்கன் சொன்னால் அதைபோய் என்னிடம் கேள்வி கேட்கிறீர்களே, கொடநாடு வழக்கு என்ன ஆச்சு, A TO Z டீம் அவர்கள்தான். அவர்களை பற்றி சொல்ல ஆயிரம் உள்ளது அது இனிமேல் ஒவ்வொன்றாக வெளியே வரும், கட்சியின் நலன் கருதி பொறுமை காத்தோம்.

ஈபிஎஸ் தாத்தா தொடங்கிய கட்சியா?

சின்னமாவையும், பன்னீர் செல்வத்தையும் டிடிவியையும் எக்காரணத்தை கொண்டு நாங்கள் சேர்க்கமாட்டோம் என்று சொல்கிறார். இவர் ஆரம்பித்த கட்சியா இது; இல்லை இவர் தாத்தா ஆரம்பித்த கட்சியா? ஆணவத்தின் உச்சத்தில் உள்ளார். ஆணவத்தை அடக்கும் சக்தி அதிமுக தொண்டர்கள், மக்களிடம் உள்ளது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்