தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  நெருங்கும் மக்களவை தேர்தல்.. எஸ்.டி.பி.ஐ மாநாட்டில் பங்கேற்க இபிஎஸ்-க்கு அழைப்பு!

நெருங்கும் மக்களவை தேர்தல்.. எஸ்.டி.பி.ஐ மாநாட்டில் பங்கேற்க இபிஎஸ்-க்கு அழைப்பு!

Karthikeyan S HT Tamil
Dec 25, 2023 01:02 PM IST

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மதுரையில் ஜனவரி 7 ஆம் தேதி மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது.

நெருங்கும் மக்களவை தேர்தல்.. எஸ்.டி.பி.ஐ மாநாட்டில் பங்கேற்க இபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நெருங்கும் மக்களவை தேர்தல்.. எஸ்.டி.பி.ஐ மாநாட்டில் பங்கேற்க இபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையில் உருவாகியுள்ள கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் கூட்டணியை தொடர்ந்து வருகின்றன. இந்தச்சூழலில் அதிமுக, பாஜக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படுமா? என அரசியல் பார்வையாளர்கள் இடையே விவாதங்கள் ஒருபுறம் அரங்கேறி வருகின்றன.

இதனிடையே திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தையை ஏற்கெனவே தொடங்கி விட்டது. அதிமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. இருப்பினும் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நாளை (டிச.26) சென்னையில் நடைபெறுகிறது. நாளை காலை 10.35 மணிக்கு தொடங்கும் இக்கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் வரும் ஜனவரி 7 ஆம் தேதி மதுரையில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. மக்களவை தேர்தல் சில மாதங்களில் அறிவிக்கப்பட உள்ள பரபரப்பான சூழலில் இந்த மாநாட்டை எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவித்துள்ளது. இதற்கிடையில், எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மதுரையில் தேதி நடைபெற இருக்கும் மாநாட்டில் கலந்துகொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இபிஎஸை நேரில் சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கியுள்ளாா்.

இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர் வேலுமணி உடனிருந்தார். மேலும், எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, மாநில பொதுச்செயலாளர் நஸ்ருதீன், மாநில செயலாளர் ஏ.கே.கரீம் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் தென் சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் பரபரப்பான சூழலில், எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நடைபெறும் மாநாட்டில் அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது கூட்டணிக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்