தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ed Raids: பிரபல தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் ரெய்டு..திண்டுக்கல்லில் பரபரப்பு!

ED Raids: பிரபல தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் ரெய்டு..திண்டுக்கல்லில் பரபரப்பு!

Karthikeyan S HT Tamil
Sep 12, 2023 10:42 AM IST

திண்டுக்கல்லில் பிரபல தொழில் அதிபர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவரது மைத்துனர் கோவிந்தன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்லில் தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவரது மைத்துனர் கோவிந்தன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ரத்தினம். பிரபல தொழில் அதிபரான இவர் திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். மேலும், தமிழகம் முழுவதும் மணல் அள்ளுதல், சில்லறை விற்பனை செய்தல், மணல் குவாரி, ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டி விற்கும் தொழிலும் செய்து வருகிறார்.

இந்நிலையில், திண்டுக்கல் ஜி.டி. என் சாலையில் உள்ள ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு இன்று காலை 10-க்கும் மேற்பட்ட கார்களில் வந்த 15-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல், ரத்தினத்தின் மைத்துனர் கோவிந்தன் வசித்து வரும் திண்டுக்கல் ஹனிபா நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கேயும் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோவிந்தனுக்கு சொந்தமாக மூன்று பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. மேலும், மணல் குவாரி, ரியல் எஸ்டேட், வீடு கட்டி விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறார். கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருவருக்கும் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வரும் நிலையில், திண்டுக்கல்லில் பிரபல தொழில் அதிபர் ரத்தினம் மற்றும் அவரது மைத்துனர் கோவிந்தன் வீடு, அலுவலகம் என இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு பண மதிப்பு இழப்பு செய்த போது சென்னை தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தொடர்பில் இருந்ததாக கூறி ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ரத்தினத்தை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்