TN Police:விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணி- காவல் துறையினருக்கு டிஜிபி பாராட்டு
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியை திறம்பட மேற்கொண்ட காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

<p>டிஜிபி சைலேந்திரபாபு</p>
சென்னை: விநாயகர் சதுர்த்தி மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற சிலை கரைப்பின்போது சிறப்பாக பாதுகாப்பு வழங்கியதாக போலீஸாருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிஜிபி அனைத்து போலீஸாருக்கும் வழங்கிய பாராட்டு செய்தியில், வழக்கம்போல் இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.
இறுதியில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வல பாதுகாப்பு பணியில் 75,812 காவல் துறை அதிகாரிகளும் காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எப்போதும் இல்லாத வகையில் சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் மிகவும் அமைதியாக விநாயகர் சதுர்த்தி நிகழ்வு நடத்தி முடிக்கப்பட்டது.