தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  College Students : மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் எப்போது துவங்கும்?

College Students : மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் எப்போது துவங்கும்?

Priyadarshini R HT Tamil
Jun 23, 2023 11:28 AM IST

College Students : தொடர்ந்து முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 1 முதல் ஜூன் 10 வரை நடைபெற்றது. இதில் 40 ஆயிரத்து 287 மாணவ, மாணவிகள் சோக்கை பெற்றனா். இதையடுத்து ஜூன் 12ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரை நடைபெற்ற இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

வழக்கமாக கலை, அறிவியல் கல்லூரிகள்தான் முதலில் சேர்க்கையை முடித்து முதலாமாண்டு வகுப்புக்களை துவங்கும். அந்த வகையில் இந்தாண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அடுத்த மாதம் 3ம் தேதி முதல் துவங்குகிறது.

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் மொத்தம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்வதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாணவா்கள் பெற்றிருந்த மதிப்பெண் அடிப்படையில் உயா்கல்வித் துறை சாா்பில் தரவரிசைப் பட்டியல் தயாா் செய்யப்பட்டு கல்லூரிகளுக்கு கடந்த மே 25ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

தொடா்ந்து, சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவில் வரும் விளையாட்டு வீரா்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டவா்களுக்கான கலந்தாய்வு மே 29ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 1 முதல் ஜூன் 10 வரை நடைபெற்றது. இதில் 40 ஆயிரத்து 287 மாணவ, மாணவிகள் சோக்கை பெற்றனா்.

இதையடுத்து ஜூன் 12ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரை நடைபெற்ற இரண்டாம் கட்ட கலந்தாய்வின் இறுதியில் மொத்தம் 75 ஆயிரத்து 811 மாணவ, மாணவிகள் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தகவல் வெளியிட்டது. அதில் மாணவா்கள் 31,621 பேர், மாணவிகள் 44,190 பேர். இந்நிலையில் கல்லூரிகளில் 31 ஆயிரத்து 488 இடங்கள் காலியாக உள்ளன.

மாணவா்களை விட மாணவிகள் 12 ஆயிரத்து 569 பேர் அதிகமாக சோந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எஞ்சிய இடங்களுக்கு இன சுழற்சி முறையில் மாணவா் சோக்கை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து உயா்கல்வித் துறையின் செய்திக்குறிப்பில் கூறியுள்ள விவரங்கள், ஜூன் 30ம் தேதி வரை முதலாம் ஆண்டு மாணவா் சோக்கை நடைபெறும். தொடா்ந்து முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு ஜூலை 3ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் ஜூன் 22ம் தேதி தொடங்கும் என உயா்கல்வித் துறை ஏற்னவே அறிவித்திருந்தது. இந்நிலையில், மாணவா்களின் சோக்கைக்காக தமிழகத்தில் கல்லூரிகளின் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்