MK Stalin: சேலத்தில் முதல்வர் சொன்ன கரடி கதை! அதிமுக, பாஜகவை கடுப்பேற்றிய ஸ்டாலின்!
"அதிமுகவும், பாஜகவும், மக்கள் வெள்ளத்தில் இவர்கள் இருவரும் அடித்து செல்லப்படுவார்கள் என்பது உறுதி"
நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக சார்பில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில், கொத்தடிமை கூட்டமான அதிமுகவை நம்பி பாஜக தேர்தலுக்கு வந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
அம்மையார் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்துள்ள தேர்தலில் தோல்வியை மட்டுமே பெற்ற கட்சிதான் இன்றுள்ள அதிமுக. நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியை தவிர அனைத்திலும் அதிமுக தோற்றது. தோல்வி மேல் தோல்வி அடைந்த கட்சி அதிமுக.
சசிகலாவின் காலை நோக்கி ஊர்ந்து சென்று முதலமைச்சர் பதவியை பெற்று சசிகலா காலை வாரிவிட்டு பாஜகவிற்கு பல்லக்குதுக்கி கொண்டு 4 ஆண்டு கால ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவில் ஒருவருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி தர உள்ளதாக செய்தி வருகிறது. தமிழ்நாட்டில் தாங்கள் செய்த துரோகங்களுக்கு அதிமுகவை பொறுப்பாக்கும் முயற்சியாக கூட இது இருக்கலாம்.
இதை படித்த உடன் ஒரு கதை ஒன்று என் நினைவுக்கு வந்தது. ஒரு ஆற்றில் திடீர் வெள்ளம் பெருக்கடுத்து ஓடியது. கரையில் நின்ற பொதுமக்கள் நமக்கு எதாவது அகப்படாதா என காத்திருந்தார்கள். அப்போ கருப்பா பெருசா ஒன்னு உருண்டு வந்தது. அதை எடுக்க பலருக்கு போட்டி, ஒரு ஆள் அதை கைப்பற்றிவிட்டார். அதன் பிறகுதான் தெரிந்தது அது கரடி என்று; அந்த ஆள் கரடியை விட தயாராகிவிட்டார் ஆனால் அந்த கரடி அவரை விட தயாராக இல்லை. அந்த ஆளும் கரடியும் போன்றதுதான் அதிமுகவும், பாஜகவும், மக்கள் வெள்ளத்தில் இவர்கள் இருவரும் அடித்து செல்லப்படுவார்கள் என்பது உறுதி.