Vijay Makkal IYakkam: அண்ணாமலை யாத்திரைக்கு விஜய் ஆதரவா? பறந்த கொடி! பதறி விளக்கம் தந்த விஜய் மக்கள் இயக்கம்
”‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிகழ்வின்போது விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியுடன் சிலர் கலந்து கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது”
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மதுரையில் அவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடிகளோடு சிலர் கலந்து கொண்ட நிலையில் இதற்கு அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி தொடங்கிய அண்ணாமலையின் நடைபயணம் சென்னையில் நிறைவடைய உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்த இந்த நடைபயணத்தில் பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ச்சியாக 6 மாதங்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த பயணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி நிறைவடைகிறது. தற்போது இப்பயணம் மதுரையை அடைந்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் மதுரையில் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிகழ்வின்போது விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியுடன் சிலர் கலந்து கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது.
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில் “தளபதி விஜய் மக்கள் இயக்க கொடியோடு மாற்றுக் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தில் எந்த பொறுப்பிலும் இல்லை. மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என புஸ்சி ஆனந்த் ட்வீட் செய்துள்ளார்.
டாபிக்ஸ்