M.K.Stalin: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி கைது
ஜெயக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை தவறான முறையில் சித்தரித்து அவதூறு கருத்துகளை பரப்பிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
கடலூர் மாவட்டம் கீரம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக ஐ.டி.விங் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஜெயக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து முதல்வர் குறித்து தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதற்கு திமுகவினர் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதைத்தொடர்ந்து பாஜக நிர்வாகி ஜெயக்குமார் மீது திருநெல்வேலி மாவட்ட திமுகவினர் திருநெல்வேலி காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி போலீசார் கடலூர் சென்று பாஜக நிர்வாகி ஜெயக்குமாரை இன்று கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் திருநெல்வேலி அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்