தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Law Application : மாணவர்களின் கவனத்திற்கு! சட்டம் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

Law Application : மாணவர்களின் கவனத்திற்கு! சட்டம் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

Priyadarshini R HT Tamil
Jun 10, 2023 09:31 AM IST

Law Application : நடப்பாண்டிற்கான ஒருங்கிணைந்த 5 ஆண்டு கால சட்டப்படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் தமிழகத்தில் சமீபத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 5 ஆண்டு சட்டப்படிப்பு படிப்பில் சேர்வதற்கு மே 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

அந்த வகையில் நடப்பாண்டிற்கான 5 ஆண்டு கால சட்டப் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க மே 31ம் தேதி மாலையுடன் கால அவகாசம் முடிவடைந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலன்கருதி அவர்களின் கோரிக்கையை ஏற்று சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி இன்று (ஜூன் 10ம் தேதி) வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க http://tndalu.ac.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும். எனவே சட்டம் படிக்க விரும்பும் மாணவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

முன்னதாக தேர்வு முடிவுகள் வெளியானது முதல், அனைத்து பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தல், கவுன்சிலிங் என கல்லூரி வளாகங்கள் பரபரப்பாக காணப்படுகின்றன. அதேபோல் சட்டக்கல்லூரியில் படிப்பதற்கும் மாணவர்கள் பரபரப்பாக விண்ணப்பித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்