சிராவயல் மஞ்சுவிரட்டு..மாடு முட்டியதில் சிறுவன் உள்பட 2 பரிதாப மரணம்!
Siravayal Manjuvirattu: சிவகங்கை மாவட்டம் சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் சிறுவன் உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனா்.

மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சிராவயல் கிராமத்தில் நடக்கும் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் சிறுவன் உள்பட 2 பார்வையாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தை 3 ஆம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு இன்று (ஜன.17) நடைபெற்று வருகிறது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி முன்னிலை வகித்தனர்.