தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ipl 2023: பழையபடி பாட்ஷாவாக மாறுமா மும்பை இந்தியன்ஸ்? ஆர்சிபியுடன் சேலஞ்

IPL 2023: பழையபடி பாட்ஷாவாக மாறுமா மும்பை இந்தியன்ஸ்? ஆர்சிபியுடன் சேலஞ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 02, 2023 08:00 AM IST

உள்ளூர் போட்டிகளில் மோசமான ரொக்காட்டை வைத்திருக்கும் அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி இருந்து வரும் நிலையில், முதல் போட்டியில் சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியை பெங்களூருவில் எதிர்கொள்கிறது.

ஐபிஎல் 2023 சீசன் 5வது போட்டியில் மோதிக்கொள்ளும் ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல் 2023 சீசன் 5வது போட்டியில் மோதிக்கொள்ளும் ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த சீசனை மறக்க வேண்டிய அளவில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. தனது முதல் ஐபிஎல் டைட்டிலுக்காக 15 ஆண்டுகளாக போராடி வரும் ஆர்சிபி அணி, இந்த முறை அதற்கான பயணத்தை உள்ளூர் மைதானமான சின்னசாமி ஸ்டேடியத்தில் இருந்து தொடங்குகிறது.

கடந்த மூன்று சீசன்களாக ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் தகுதி பெற்றபோதிலும், இறுதிக்கு முன்னேற முடியாமல் பரிதாபமாக வெளியேறி வருகிறது. இந்த முறை ஆர்சிபி விளையாட இருக்கும் முதல் 8 போட்டிகளில் 6 போட்டிகள் உள்ளூர் மைதானத்திலேயே நடைபெற இருக்கிறது.

ஆனால் உள்ளூர் மைதானத்தில் அதிக வெற்றிகளை குவிக்காத அணி என்கிற மோசமான சாதனையை தன் வசம் வைத்துள்ள ஆர்சிபி அணி. ஆட்டம் சிறப்பாக இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாத அணியாகவே இருந்து வரும் ஆர்சிபி இந்த முறை அதை மாற்றி அமைக்குமா என ரசிகர்களை வழக்கம்போல் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணியின் முக்கிய வீரர்காளவும், கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டவர்களுமான ஹசரங்கா டி சில்வா, ராஜத் பட்டிதார், ஜோஷ் ஹசில்வுட் ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார்கள். ஹசரங்கா நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்ந்து முடிந்தவுடன் அணியில் இணைவார் என தெரிகிறது.

ஆனால் பட்டிதார் காயமடைந்துள்ள நிலையில் அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். ஹசில்வுட் புத்துணர்வு முகாமில் இருந்து வரும் நிலையில், ஏப்ரில் 13ஆம் தேதிக்கு பிறகு அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை அணியிலும் ஆர்சிபி போல் முக்கிய வீரர்களான ஜஸ்ப்ரீத் பும்ரா, ஜேய் ரிச்சட்ர்சன் ஆகியோர் காயத்தால் தொடரிலிருந்து விலகியுள்ளனர். இருப்பினும் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்தும் விதமாக ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் உள்ளனர். இவர்களுக்கு கை கொடுக்கும் விதமாக தமிழ்நாடு அணியை சேர்ந்த சந்தீப் வாரியரும், பும்ராவுக்கு மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த சீசனில் பெற்ற மோசமான தோல்வியை மறக்கடிக்கும் விதமாக பழைய பாணியில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக மாறுவதற்கான அனைத்து வித முயற்சிகளையும் மும்பை அணி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிட்ச் நிலவரம்

போட்டி நடைபெறும் சின்னசாமி மைதானம் பேட்ஸ்மேன்களில் சொர்க்கபுரியாகவே இருந்துள்ளது. பந்து வீச்சாளர் கனவில் விளையாட விரும்பாத இடமாகும் இருக்கும் இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன் ரன் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூருவில் மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும், வறண்ட வானிலை நிலவினாலும், இரவு நேரத்தில் வெப்பநிலை குறைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்