தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  India 3rd Test: ஆஸி., சுழலில் சிக்கியது இந்தியா!-109 ரன்களில் ஆல்-ரவுட்

India 3rd Test: ஆஸி., சுழலில் சிக்கியது இந்தியா!-109 ரன்களில் ஆல்-ரவுட்

Manigandan K T HT Tamil
Mar 01, 2023 12:59 PM IST

Border-Gavaskar test: பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டின் மூன்றாவது ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டத்தின்போது எடுத்த போட்டோ
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டத்தின்போது எடுத்த போட்டோ (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் நாள் முதல் பாதியிலேயே ஆஸி., பந்துவீச்சாளர்களின் சுழலில் சிக்கியது இந்தியா. 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெறும் 109 ரன்களில் சுருண்டது இந்திய அணி.

முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்ற முன்னிலையில் உள்ள நிலையில், இன்று மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் இந்தூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸில் களத்தில் இறங்கிய தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்களிலும், சுப்மன் கில் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சொதப்பியதால் கே.எல்.ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுப்மன் கில் களமிறக்கப்பட்டார்.

ஸ்கோர் என்னவோ 34 என தான் இருந்தது. பின்னர் வந்த புஜாரா, விராட் கோலி ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

ரவீந்திர ஜடேஜா 4 ரன்களில் நடையைக் கட்டினார். கோலி 22 ரன்களிலும், புஜாரா 1 ரன்னில் செல்ல, ஸ்ரேயஸ் ஐயர் டக் அவுட் ஆனார்.

இவ்வாறாக 25 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களை பதிவு செய்தது. அடுத்த களம் இறங்கிய அஸ்வின் 3 ரன்களிலும், அக்சர் படேல் 12 ரன்களிலும் நடையைக் கட்டினர்.

பிற வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இவ்வாறாக இந்திய அணி முதல் நாளின் முதல் பாதிக்குள் 33.2 ஓவர்களில் 109 ரன்களில் சுருண்டது.

ஆஸி., தரப்பில் அதிகபட்சமாக மாத்யூ குனேமேன் 5 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 3 விக்கெட்டுகளையும் டாட் முர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்திய கிரிக்கெட் அணி வெற்றி நடை போடும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், 3வது ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் சொதப்பி வருகிறது.

தனது முதல் இன்னிங்சை ஆஸ்திரேலியா விளையாடவுள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்