தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime: பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை.. ராஜஸ்தானில் பரபரப்பு

Crime: பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை.. ராஜஸ்தானில் பரபரப்பு

Manigandan K T HT Tamil
Feb 09, 2023 12:06 PM IST

Bank robbery in Dholpur: ராஜஸ்தானின் தோல்பூரில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளையடித்தவர்களில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட வங்கி
கொள்ளையடிக்கப்பட்ட வங்கி

ட்ரெண்டிங் செய்திகள்

தகவல் அறிந்து அந்தப் பகுதிக்கு விரைந்து வந்த போலீஸார், அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர்.

அப்போது கொள்ளையர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. முடிவில் 3 கொள்ளையர்களை போலீஸார் மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ராஜஸ்தானின் தோல்பூர் அருகே மைரானா நகரில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.5லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் கொள்ளையர்கள் தப்பிச் செல்ல முயன்றனர்.

தகவல் கிடைத்ததும் அந்தப் பகுதிக்கு விரைந்து கொள்ளையர்களை விரட்டி பிடிக்க முயன்றோம்.

அப்போது, கொள்ளையர்கள் மூன்று பேர் காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, நாங்களும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினோம். முடிவில் காயமடைந்த 3 கொள்ளையர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.45 லட்சம் கைப்பற்றப்பட்டது.

அவர்களை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம். எஞ்சிய பணத்துடன் 3 கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்