Electoral Bonds: தேர்தல் பத்திரங்களை தர வங்கிகளுக்கு தடை! உச்சநீதிமன்றம் அதிரடி!
”2017 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முறையின் மிகப்பெரிய பயனாளியாக இருந்த பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த முடிவு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது”

தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்தவும், மார்ச் 6-ஆம் தேதிக்குள் அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவும் பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் என்பது இந்தியாவில் உள்ள தனிநபர்கள் அல்லது நிறுவனங்களால் அரசியல் கட்சிகளுக்கான நிதி பங்களிப்பிற்காக அளிக்கப்படுகிறது.
தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதற்கும் பணமாக்குவதற்கும் அங்கீகரிக்கப்பட்ட ஒரே வங்கி எஸ்பிஐ மட்டுமே. கடன் வழங்குபவர் பத்திரங்களை அச்சிடுவதில்லை, ஆனால் அதன் அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் வெவ்வேறு காலண்டர் ஆண்டுகளில் மையத்திலிருந்து அவற்றைப் பெறுகின்றன.
கடந்த ஆண்டு, எஸ்பிஐ ஆர்டிஐ கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, 2018 ஆம் ஆண்டில் தேர்தல் பத்திர திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 29 தவணைகளில் ரூ.15,956.3096 கோடி மதிப்பிலான 27,133 அல்லது 55.9 சதவீதம் அச்சிடப்பட்ட தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கட்சிகளுக்கு நிதி தரும் நன்கொடையாளர் யார் என்ற விவரம் வங்கி மற்றும் நன்கொடையை பெறும் அரசியல் கட்சிகளால் ரகசியமாக வைக்கப்படுகின்றன.
இந்த தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை "அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்று ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.