தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’ரெட்டியார் கூட கொண்டா ரெட்டி சர்டிபிகேட் வாங்க திரிகிறார்கள்’ Kkssr பேச்சு

’ரெட்டியார் கூட கொண்டா ரெட்டி சர்டிபிகேட் வாங்க திரிகிறார்கள்’ KKSSR பேச்சு

Kathiravan V HT Tamil
Apr 17, 2023 11:06 AM IST

எல்லா சமூதாயத்து மக்களும் எஸ்.டி.சர்டிபிகேட் வாங்குவதில் அக்கறையாக இருக்கிறார்கள் - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேரவையில் பேச்சு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,

ட்ரெண்டிங் செய்திகள்

இன்றைய தினம் (17-04-2023) மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகநலத்துறை மானியக்கோரிக்கை நடைபெற உள்ள நிலையில் கேள்வி நேரத்தின் போது செங்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பலபகுதியில் மலைக்குறவன் மக்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்கப்பட்டது ஆனால் தற்போது அவை வழங்கப்படவில்லை. குரும்பன், லம்பாடி இன மக்களுக்கும் பழங்குடியினர் சான்று வழங்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எல்லா சமூதாயத்து மக்களும் எஸ்.டி.சர்டிபிகேட் வாங்குவதில் அக்கறையாக இருக்கிறார்கள். உதாரணத்துக்கு எங்கள் ரெட்டியார் கூட ’கொண்டா ரெட்டி’ என்று வாங்க வேண்டும் என்று திரிகிறார்கள். முன்னேறிய சமுதாயம் கூட அதிலே அக்கறையோடு உள்ளார்கள். பொதுவாக நாயக்கர் என்று உள்ளவர்கள் ’காட்டுநாயக்கர்’ என்று வாங்க நினைக்கிறார்கள்.

படிப்பதற்கும், இட ஒதுக்கீடு வழங்குவதற்கும் போராடுகிறார்கள், ஒருவருக்கு கிடைப்பது இன்னொருவர் வளர்ச்சிக்கு இடைச்சலாக இருக்க கூடாது. சான்றிதழ் கேட்பவர்களுக்கு ரத்த சம்பந்தமான உறவுகள் இருக்குமானால் அவர்களுக்கு நிச்சயமாக வழங்குவோம் என உறுதி அளித்தார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்