தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime : நகைய காணுமாம்.. அதுக்குனு இப்படியா? உறவுக்கார பெண்ணை பிளேடால் கிளித்து சித்திரவதை செய்து கொன்ற உறவினர்கள்!

Crime : நகைய காணுமாம்.. அதுக்குனு இப்படியா? உறவுக்கார பெண்ணை பிளேடால் கிளித்து சித்திரவதை செய்து கொன்ற உறவினர்கள்!

Divya Sekar HT Tamil
Jun 23, 2023 10:47 AM IST

காசியாபாத்தில் நகைகளை திருடியதாக கூறி 23 வயது பெண்ணை அவரது உறவினர்கள் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை
கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

ஆகவே சமீனா தான் அவற்றை திருடி சென்றதாக ஹீனாவும், ரமேஷும் சந்தேகத்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் சமீனாவை வீட்டில் அடைந்து வைத்து தக்கியுள்ளனர்.

திருட்டை ஒப்புக் கொள்ளுமாறு சமீனாவின் உடலை பிளேடால் கிளித்து கொடுமைபடுத்தி உள்ளனர். மேலும் சமீனாவின் அலறல் சத்தம் வெளியில் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக பாடல் போட்டு சத்தத்தை அதிகமாக வைத்துள்ளனர்.

அவர்கள் அடித்து துன்புறுத்தியதில் சமீனா பரிதாபாக உயிரிழந்தார். சமீனா உயிரிழந்ததை அடுத்து இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பயத்தில் அவர்கள் பாடலை நிறுத்தாமலேயே சென்றுள்ளனர். 2 நாட்களாக தொடர்ந்து பாடல் ஒலித்து கொண்டு இருந்ததால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சமீனா சடலமாக கிடந்துள்ளார். பின்னர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் ஹீனா மற்றும் ரமேஷ் இருவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது பின்னர் தலைமறைவான ஹீனா மற்றும் ரமேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நகைகளை திருடியதாக கூறி 23 வயது பெண்ணை அவரது உறவினர்களே கொன்ற சம்பவம் காசியாபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்