தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rahul Gandhi: சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு!

Rahul Gandhi: சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 02, 2023 07:58 PM IST

ராகுல் காந்தி இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை எதிர்த்து நாளை மேல்முறையீடு செய்கிறார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வழக்கை பாஜக சட்டமன்ற உறுப்பினரும், குஜராத் முன்னாள் அமைச்சர் மோடி நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கு தொடர்பாக ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி ராகுல் காந்திக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியதன் காரணமாக ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.

மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி நாளை ( ஏப்ரல் 3) மேல் முறையீடு செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக ராகுல் காந்தி மேல் முறையீடு செய்வதற்காக நாளை சூரத் செல்கிறார். இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி அப்பீல் செய்கிறார். ஒருவேளை மேல்முறையீடு முடிவில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் ரத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்