Pulwama Murder: புல்வாமாவில் காஷ்மீரி பண்டிட் சுட்டுக்கொலை
Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் ஆயுதமேந்திய மற்றுமொரு பாதுகாப்பு அலுவலராக உள்ள காஷ்மீரி பண்டிட் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்த்தில் இன்று காஷ்மீரி பண்டிட் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றார்கள். இந்தப்பள்ளத்தாக்கில் மற்றுமொருவர் குறிவைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளாதாக போலீசார் தெரிவித்தனர். இன்று அதிகாலை வேளையில் தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள அச்சன் என்ற இடத்தில் தீவிரவாதிகள் ஒரு நபரை சுட்டுக்கொன்றார்கள். அவர் தனது கிராமத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. அவரது பெயர் சஞ்சய் ஷர்மா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் பாதுகாப்பு படை பணியாளர். சுடப்பட்ட பின் அவர் அவசரஅவசரமாக மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லப்பட்டார் ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதுகுறித்து காஷ்மீர் போலீசார் செய்துள்ள டிவீட்டில், “சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திவீரவாதிகள் குறிவைத்து சுட்டுக்கொன்றுவிட்டார்கள். அவரது பெயர் சஞ்சய் ஷர்மா. இவர் காஷிநாத் ஷர்மாவின் மகன் ஆவார். புல்வாமாவின் அச்சன் என்ற இடத்தில் மார்க்கெட்டிற்கு செல்லும் வழியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால், அவர் படுகாயமடைந்திருந்தார். அவரது கிராமத்தில் ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வருகிறது. விசாரணைகள் தொடர்கிறது. தகவல்கள் தொடர்ந்து வழங்கப்படும்‘ என்று தெரிவித்துள்ளார்கள்.
அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டு, சுட்டவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
இதுகுறித்து தெற்கு காஷ்மீர் டிஐஜி ராயீஸ் முகமது பட் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இதில் நீதி நிலை நாட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நாங்கள் இதில் தொடர்புடைய தீவிரவாதியை விரைவில் கண்டுபிடிப்போம். இதற்கான பதிலடி விரைவில் வழங்கப்படும். அவர்களின் தாக்குதல் முறையை கண்டுபிடிப்பதில் நாங்கள் தோல்வியடைந்துவிட்டோம்.
நாங்கள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவந்த நிலையிலும், எதிர்பாராத சூழலில் இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அதுகுறித்தான விசாரணையும் கண்டிப்பாக நடைபெறும்.
இச்சம்பவம் குறித்து காஷ்மீர் பண்டிட் சங்கர்ஷ் சமிதி என்ற காஷ்மீரி பண்டிட்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு காஷ்மீரின் பண்டிட் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது வெட்கப்படவேண்டிய விஷயம். அவர் தங்கள் வீட்டின் அருகில் உள்ள ஏடிஎம்மின் காலவாளி ஆவார். புல்வாமா அச்சனில் உள்ள அவரது மனைவியும், இரு குழந்தைகளும் தவிக்கிறார்கள் என்று டிவீட் செய்துள்ளார்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்