Kerala Crime : கல்யாணம் ஆகி ஒரு மாதம் தான் ஆகுது.. கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு? .. பெண் தற்கொலை!
திருவனந்தபுரத்தில் திருமணமான ஒரே மாதத்தில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் முள்ளில்லாவன் முடு என்ற பகுதியில் வசித்து வந்தவர் ரேஷ்மா (23) இவருக்கு அருவிக்கரா பகுதியை சேர்ந்த அக்ஷய் ராஜ் என்பவரை பேசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இரு வீட்டு பெற்றோர்களும் இணைந்து, மணமக்களின் சம்மதத்தை பெற்று, கடந்த மாதம் 12ஆம் தேதி இவர்களின் கல்யாணத்தை தடபுடலாக நடத்தி வைத்திருக்கிறார்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதையடுத்து ரேஷ்மா தன்னுடைய கணவர் அக்ஷய் ராஜுடன் அருவிக்கராவில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். புதுமண தம்பதிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் வாழ்க்கையை துவக்கினர். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரேஷ்மா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
அவரது படுக்கை அறையில் உள்ள ஃபேனில் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அக்ஷயின் குடும்பத்தினர் அலறி துடித்தனர்.. உடனடியாக போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர். போலீசாரும் விரைந்து வந்து ரேஷ்மாவின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வு செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.
பிறகு, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை கையில் எடுத்தனர். போலீஸாரின் தீவிர விசாரணையில், ரேஷ்மாவின் கணவர் அக்சய் ராஜ் வேறொரு பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் தொடர்ந்து பேசி வந்ததால், கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தில், புதுமணப்பெண் ரேஷ்மா தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
திருமணமான ஒரே மாதத்தில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது திருவனந்தபுரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.