தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Manipur Violence: கடும் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு

Manipur violence: கடும் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 27, 2023 11:38 AM IST

இன்று 6ஆவது நாளாக மணிப்பூர் விவகாரம் குறித்து தொடர்ந்து எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றனர். இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு உடையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதையடுத்து தற்போது நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

ட்ரெண்டிங் செய்திகள்

மணிப்பூர் பழங்குடி பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் எம்.பியும் மக்களவை துணை தலைவருமான கவுரவ் கோகாய் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நேற்று கொண்டு வந்தார். இதை மக்களவை சபாநாயகர் விவாதத்திற்கு ஏற்று கொண்டார். இந்த சூழலில் நாடாளுமன்றத்தில் இன்று 6ஆவது நாளாக மணிப்பூர் விவகாரம் குறித்து தொடர்ந்து எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றனர். இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு உடையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதையடுத்து தற்போது நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிரதமர் மோடி, மணிப்பூரில் நடைபெற்ற சம்பவம் எந்த நாகரீக சமூகத்துக்கும் அவமானகரமானது. மணிப்பூரில் பெண்கள் அவமதிக்கப்பட்ட சம்பவம், இந்தியாவிலுள்ள 140 கோடி மக்களையும் அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது. மணிப்பூரின் மகள்களுக்கு ஏற்பட்டதை மன்னிக்கவே முடியாது. எந்த குற்றவாளிகளும் தப்பமாட்டார்கள் என நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்