முடி உதிர்வு பிரச்சனை - இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!
கர்நாடகாவில் முடி உதிர்வு பிரச்சனையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ராகவேந்திரா விரிவாக்கம் பகுதியை சேர்ந்த காவ்யாஸ்ரீ (21). இவருக்கு முடி உதிர்வு பிரச்சனை இருந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
தொடர் முடி உதிர்வு காரணமாக பல்வேறு சிகிச்சைகளை எடுத்துவந்தார். இருப்பினும் தொடர்ந்து முடி கொட்டி வந்தது. ஒரு கட்டத்தில் வழுக்கை ஏற்பட்டுள்ளது.
இதனால் காவ்யாஸ்ரீ மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று (ஜூலை 2) வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், இதுகுறித்து நசராபாத் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் ச விரைந்து பெண்ணின் உடலை மீட்டு மைசூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முடி உதிர்வால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்