Jaya Prada: நடிகை ஜெயப்பிரதாவிற்கு சிறை தண்டனை!
ஜெயப்பிரதா நடத்தி வந்த திரையரங்கல் பணி புரிந்த தொழிலாளர்களுக்கான ஈஎஸ்ஐ பணத்தை அரசுகாப்பீட்டு கழகத்தில் செலுத்த வில்லை என தொழிலாளர்கள் புகார் அளித்தனர்.
பிரபல நடிகையும் முன்னாள்பாஜக எம்.பியுமான ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டடை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
நடிகை ஜெயப்பிரதா நடத்தி வந்த திரையரங்கில் பணி புரிந்த தொழிலாளர்களுக்கான ஈஎஸ்ஐ பணத்தை அரசுகாப்பீட்டு கழகத்தில் செலுத்த வில்லை என தொழிலாளர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் நீதி மன்றம் ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் ஜெயபிரதா. அந்த வகையில் நடிகையும், முன்னாள் எம்பியுமான ஜெயப்பிரதா மீது அரசு தொழிலாளர் காப்பீட்டு கழகம் வழக்கு ஒன்று தொடர்ந்தது. ராம்குமார், ராஜ்பாபு ஆகியோருடன் இணைந்து நடத்திய திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. பணத்தை அரசு தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்துக்கு செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.