தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Turkey Earthquake: துருக்கி நில நடுக்கத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு!

Turkey Earthquake: துருக்கி நில நடுக்கத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு!

Karthikeyan S HT Tamil
Feb 11, 2023 10:34 PM IST

துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதை இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்த இந்தியர்.
துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்த இந்தியர்.

ட்ரெண்டிங் செய்திகள்

சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாகக் குலுங்கின. இந்த நிலையில் துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் பலியாகியிருப்பதை இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. தொழில் நிமித்தமாக துருக்கி சென்ற அவரின் உடலை மலாத்யா பகுதியில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்து துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பிப்ரவரி 6 ஆம் தேதி நிலநடுக்கத்தில் இருந்து காணாமல் போன இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீவிஜய் குமாரின் உடல் ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்." இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில் கூறுகையில், “உள்நாட்டுப் போரில் அகதிகளாக உள்நாட்டிலே அலைந்து கொண்டிருந்த சிரிய மக்களுக்கு இந்த பூகம்பம் மேலும் துயரை அதிகரித்துள்ளது. சிரியாவை பொறுத்தவரை, இது ஒரு நெருக்கடிக்குள் நெருக்கடி. போர், கரோனா, பொருளாதார சரிவினால் சிரியா பாதிக்கப்பட்டிருந்தது. இந்த கடினமான சூழலில் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 50 லட்சம் பேர் வரை வீடுகளை இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point