Dubai Building Fire: இப்தார் நோன்புக்கு சமைத்த இந்து தம்பதி பலி.. 16 பேர் பலியான துபாய் விபத்தில் உருக்கமான நிகழ்வு!
Dubai Fire: தம்பதியினர் சனிக்கிழமை விஷு பண்டிகையை கொண்டாடியுள்ளனர். அவர்கள் வாழை இலையில் பரிமாறப்படும் சைவ உணவுகளை விஷுசத்யாவிற்கு தயார் செய்து கொண்டிருந்துள்ளனர்.
துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 16 பேர் பலியானதில், உயிரிழந்த இந்திய தம்பதிகள், அண்டை வீட்டாருக்கு இப்தார் விருந்து தயாரித்துக் கொண்டிருந்ததாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. .
ட்ரெண்டிங் செய்திகள்
துபாயின் அல் ராஸ் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். ஒன்பது பேர் காயமடைந்தனர். கேரளாவைச் சேர்ந்த ரிஜேஷ் கலங்கடன், 38, மற்றும் அவரது மனைவி ஜெஷி கண்டமங்கலத், 32, ஆகியோரும் அந்த வளாகத்தில் குடியிருந்தனர். கலாங்காடன் ஒரு டிராவல்ஸ் மற்றும் டூரிஸம் நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு மேலாளராக பணிபுரிந்து வந்தார். ஜெஷி கண்டமங்கலத் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
தம்பதியினர் சனிக்கிழமை விஷு பண்டிகையை கொண்டாடியுள்ளனர். அவர்கள் வாழை இலையில் பரிமாறப்படும் சைவ உணவுகளை விஷுசத்யாவிற்கு தயார் செய்து கொண்டிருந்துள்ளனர். மேலும் அவர்களது அருகில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உள்ளிட்ட 7 இஸ்லாமிய இளைஞர்களை இப்தார் விருந்துக்கு அழைத்ததாக வளைகுடா செய்திகள் தெரிவிக்கின்றன.
அபார்ட்மெண்ட் எண் 409 இல் ஏழு அறை தோழர்களுடன் வசித்து வந்த ரியாஸ் கைகம்பம் என்பவருடன், தீ விபத்து ஏற்பட்ட எண் 405 பிளாட்க்கு அருகில் உள்ள 406 இல் வசித்த கேரள தம்பதிகள் மிகவும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
தம்பதிகள் தங்கள் பண்டிகைகளின் போது கைகம்பம் மற்றும் அவரது அறை தோழர்களை அழைப்பது வழக்கம். “முன்பெல்லாம் ஓணம் மற்றும் விஷூ மதிய உணவின் போது எங்களை அழைப்பார்கள். இந்த முறை ரம்ஜான் என்பதால் இப்தாருக்கு வரச் சொன்னார்கள்” என்று கைகம்பம் தெரிவித்துள்ளார்.
மேலும் கேரள தம்பதியரை அவர்களது குடியிருப்பிற்கு வெளியே கடைசியாகப் பார்த்ததாகவும் கைகம்பம் கூறியுள்ளார். "விருந்து முன்னர் அழைப்புகளுக்கு அவர்களிடம் எந்த பதிலும் இல்லை என்றும், மதியம் 12.35 மணிக்கு வாட்ஸ்அப்பில் ரிஜேஷ் கடைசியாகப் கண்காணித்ததை பார்க்க முடிந்ததும் என்றும், ஞாயிற்றுக்கிழமைக்கான எனது விமான டிக்கெட்டை முன்பதிவு செய்ய உதவியவர், என்னை இப்தாருக்கு அழைத்தவர் (அவரது மனைவியுடன்) போய்விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை,’’ என்றும் அவர் உருக்கமாக கூறியுள்ளார்.
தீ விபத்தின் போது வீட்டில் இல்லாத அவரது ரூம்மேட் சுஹைல் கோபா கூறுகையில், “எங்கள் அண்டை வீட்டாரை இழந்ததால் நாங்கள் மிகவும் பேரழிவிற்கு ஆளாகிறோம். அவர்கள் நான் அன்றாடம் சந்தித்தவர்கள். நாங்கள் 16 அண்டை வீட்டாரை இழந்த அதே இடத்தில் வாழப் போவதை நினைக்கும்போது மனவேதனையாக இருக்கிறது, அவர்களில் சிலர் எங்களுக்கு நெருக்கமாக இருந்தனர்,’’ என்று கூறியுள்ளார்.
சனிக்கிழமை மதியம் 12.35 மணியளவில் தீ விபத்து குறித்து துபாய் குடிமைத் தற்காப்பு நடவடிக்கை அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துபாய் குடிமைத் தற்காப்புத் தலைமையகத்தைச் சேர்ந்த குழு ஒன்று தீ விபத்து நடந்த இடத்திற்கு வந்து கட்டிடத்தில் இருந்து குடியிருப்பவர்களை வெளியேற்றத் தொடங்கியது.
போர்ட் சயீத் தீயணைப்பு நிலையம் மற்றும் ஹம்ரியா தீயணைப்பு நிலையத்தின் குழுக்களும் வரவழைக்கப்பட்டன. உள்ளூர் நேரப்படி மதியம் 2:42 மணிக்கு தீ அணைக்கப்பட்டது. பிற்பகல் 3 மணியளவில், சிவில் பாதுகாப்புக் குழுவினர் கிரேன்கள் மூலம் மூன்றாவது மாடியில் இருந்தவர்களை மீட்டனர்.
டாபிக்ஸ்