தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime: மனைவியின் தலையை மூன்று துண்டாக்கிய கணவன்.. அதன்பின் எடுத்த விபரீத முடிவு!

Crime: மனைவியின் தலையை மூன்று துண்டாக்கிய கணவன்.. அதன்பின் எடுத்த விபரீத முடிவு!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 29, 2023 12:33 PM IST

மனைவியின் தலையை மூன்று துண்டுகளாக வெட்டிய கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொலை
கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

மது அருந்திவிட்டு போதையில் வரும் இவர் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரைத் தடுக்க வரும் அவரது மகள்களையும் அடிக்கடி அடித்து உதைத்துள்ளார். இதன் காரணமாக நீண்ட நாட்களாக இந்த தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

தொந்தரவு தாங்க முடியாமல் நிர்மலா பள்ளிக்கூடேம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் தம்பதியினரை காவல்துறையினர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமும் செய்து வைத்துள்ளனர்.

அதற்குப் பிறகும் மது அருந்திவிட்டு பாவிடு மனைவி நிர்மலாவிடம் தகராறு ஈடுபட்டு வந்துள்ளார். நிர்மலா மீண்டும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதன் காரணமாக காவல்துறையினர் பாவிடுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாவிடு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். பின்னர் உறவினர்கள் கணவன் மனைவிக்கு இடையே சமாதானம் ஏற்படுத்தி விட்டுச் சென்றுள்ளனர். அன்று இரவு தம்பதி இருவரும் ஒரே அறையில் உறங்கியுள்ளனர். தன்னை சிறைக்கு அனுப்பிய மனைவி மீது கணவர் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.

திடீரென அதிகாலை எழுந்த பாவிடு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து நிர்மலாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது தலையைத் துண்டாக வெட்டியுள்ளார். அதன் பின்னர் அவரது தலையை மூன்று துண்டுகளாக வெட்டி வீசியுள்ளார்.

மேலும் நிர்மலாவின் இரண்டு கைகளையும் துண்டு துண்டாக வெட்டி அறையின் இருபுறமும் தூக்கி எறிந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் துண்டு துண்டாகக் கிடந்த தாயைக் கண்ட பிள்ளைகள் அதிர்ச்சியில் கூச்சல் இட்டுள்ளனர். இது குறித்து உடனே காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் நிர்மலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

கொலை செய்து விட்டுத் தப்பி ஓடிய கணவர் பாவிடு ஊருக்கு வெளியே இருந்த மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்தார். தற்போது பெற்றோரை இழந்த இரண்டு மகள்களும் ஆதரவின்றி தவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்